தஞ்சாவூர்
தமிழ்நாட்டில் உள்ள ஒரு மாநகராட்சி / From Wikipedia, the free encyclopedia
தஞ்சாவூர் (Thanjavur அல்லது Tanjore) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தமிழ் பாரம்பரிய மிக்க தொன்மையான நகரமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத் தலைநகரமாகும். இது தஞ்சை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது. சிறப்பு நிலை நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் நகராட்சி 10 ஏப்ரல் 2014 அன்று தமிழ்நாட்டின் 12-வது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[1]
தஞ்சாவூர் தஞ்சை | |
---|---|
மாநகராட்சி | |
தஞ்சைப் பெரிய கோயில், தஞ்சை அரண்மனை, வேளாண் விளைநிலம், இராசராசன் மணிமண்டபம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தோற்றம். | |
அடைபெயர்(கள்): தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் | |
ஆள்கூறுகள்: 10°47′13.2″N 79°08′16.1″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பகுதி | சோழ நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | தஞ்சாவூர் மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | எஸ். எஸ். பழனிமாணிக்கம் |
• சட்டமன்ற உறுப்பினர் | டி. கே. ஜி. நீலமேகம் |
• மாநகர முதல்வர் | காலியிடம் |
• மாவட்ட ஆட்சியர் | தீபக் ஜேக்கப், இ. ஆ. ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 38.33 km2 (14.80 sq mi) |
பரப்பளவு தரவரிசை | 11 |
ஏற்றம் | 77 m (253 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,22,943 |
• அடர்த்தி | 5,800/km2 (15,000/sq mi) |
இனங்கள் | தமிழர் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு | 613 xxx |
தொலைபேசி குறியீடு | 04362 |
வாகனப் பதிவு | TN-49, TN-68 |
சென்னையிலிருந்து தொலைவு | 320 கி.மீ (199 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 59 கி.மீ (37 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 175 கி.மீ (108 மைல்) |
சேலத்திலிருந்து தொலைவு | 192 கி.மீ (120 மைல்) |
இணையதளம் | thanjavur |
250 ஆண்டுகள் இடைக்கால சோழ பேரரசின் தலைநகரான விளங்கியது. புகழ் பெற்ற தமிழ் சோழ மன்னர்களான விசயாலய சோழன் முதல் முதலாம் இராசராச சோழன் வரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த நகரமாகும். சோழ பேரரசின் பின் தஞ்சாவூர் நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் மராத்திய அரசுகளின் தலைநகரமாக தஞ்சாவூர் விளங்கியது. தஞ்சை என்பது குளிர்ந்த அழகிய வயல்கள் மற்றும் அழகிய பனை மரங்கள் நிறைந்த பகுதி என பொருள். தஞ்சை மாவட்டத்தில் முக்கிய தொழில் விவசாயம் என்பதால் நெல் பயிர் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த தஞ்சையில் தான் அதிக அளவில் நெல் பயிர் விளைகிறது. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் திகழ்கிறது. உலக பாரம்பரிய சின்னமாகவும், உலக புகழ் பெற்றதாகவும் தஞ்சைப் பெரிய கோவில் விளங்குகிறது.