திராயன் போர்
From Wikipedia, the free encyclopedia
திராயன் போர் அல்லது திரோயன் போர் (Trojan War) ஓமர் எழுதிய இரு பெரும் கிரேக்க காப்பியங்களான இலியட்டு மற்றும் ஓடிசிக்கு பின்புலம் ஆகின்றது. இலியட்டு பத்து ஆண்டுகள் நிகழந்த திராயன் போரின் இறுதி ஆண்டின் ஐம்பது நாட்களை விபரிக்கின்றது. ஓடிசி, திராயன் போரில் பங்குகொண்ட ஒரு கிரேக்க தீவின் அரசனான ஓடீசியசு நாடு திரும்புகையில், வழிதவறி மீண்ட ஒரு பயணக் கதையை விபரிக்கின்றது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கிரேக்க காப்பியங்கள், கடவுள்கள், மனிதர்கள், பல வித உயிரினங்கள், இடங்கள், உலகங்கள், சக்திகள், இயற்கை வினோதங்கள், நிகழ்வுகள் எனப் பல அம்சங்கள் அடங்கிய பரந்த கதைப் புலங்களைக் கொண்டவை. எனினும் திராயன் போரை கெலன் (ஃகெலன்) என்ற ஒரு பெண்ணுக்கான ஒரு போராக, ஒரு மனித தளத்தில் நோக்கலாம்.