மூவலந்தீவு
From Wikipedia, the free encyclopedia
நில அமைப்பியலில் மூவலந்தீவு (peninsula, இலத்தீன்: paeninsula; paene "கிட்டத்தட்ட”, insula "தீவு") என்பது பெரும்பகுதி நீரால் சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருக்கும் நிலப்பரப்பு ஆகும். இதனைத் தீபகற்பம் அல்லது தீவகற்பம் என்றும், குடாநாடு என்றும் சொல்வதுண்டு. இலங்கையில், யாழ்ப்பாணப் பகுதி, மலாய் தீபகற்பம் ஆகியன மூவலந்தீவுகள் ஆகும்.[1][2][3][4] சூழ்ந்திருக்கும் நீர் பொதுவாக தொடர் நீர்ப்பரப்பாக இருக்கலாம். ஆனாலும், ஒற்றை நீர் வழங்கலாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சில மூவலந்தீவுகள் எப்போதும் இவ்வாறு அழைக்கப்படுவதில்லை; சில நிலக்கூம்பு, முனை, கோடிக்கரைத் தீவு, திட்டு என்றவாறும் அழைக்கப்படுகின்றன.[5]