![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/73/NewDelhiMontage.png/640px-NewDelhiMontage.png&w=640&q=50)
புது தில்லி
இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று. இந்தியாவின் தலைநகர். / From Wikipedia, the free encyclopedia
புது தில்லி (இந்தி: नई दिल्ली, உருது: نئی دہلی) இந்தியாவின் தலைநகரமாகும். இது தேசிய தலைநகர் வலயத்தில் உள்ள ஒரு மாவட்டமும், பெருநகரமும் ஆகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் பரப்பளவானது அரியானாவிலுள்ள பரீதாபாது, குர்கான் மற்றும் உத்தரப்பிரதேசத்திலுள்ள நோய்டா, காசியாபாத் ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.
புது தில்லி | |
---|---|
![]() வலச்சுழியாக மேலிருந்து இடமாக: தலைமைச் செயலகக் கட்டிடம், கன்னாட்டு பிளேசு, சந்தர் மந்தர், ராஷ்டிரபதி பவன், இந்தியாவின் வாயில் | |
நாடு | ![]() |
மாநிலம்/ஆட்பகுதி | தேசிய தலைநகர் பகுதி |
நிறுவப்பட்டது | 1911 |
துவங்கப்பட்டது | 1931 |
பரப்பளவு | |
• தலைநகரம் | 42.7 km2 (16.5 sq mi) |
ஏற்றம் | 216 m (709 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• தலைநகரம் | 2,49,998 |
• அடர்த்தி | 5,855/km2 (15,160/sq mi) |
• பெருநகர் | 2,17,53,486 |
இனம் | தில்லியர் |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, ஆங்கிலம் |
• இரண்டாம் அலுவல் மொழி | உருது, பஞ்சாபி[3] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பின்குறி(கள்) | 110xxx |
Area code | +91-11 |
வாகனப் பதிவு | DL-1x-x-xxxx to DL-14x-x-xxxx |
நகராட்சி அமைப்பு | புது தில்லி மாநகராட்சி மன்றம் |
இணையதளம் | www |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0b/Delhi_districts.png/640px-Delhi_districts.png)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/GateIndia.jpg/320px-GateIndia.jpg)
ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ் 1911ஆம் ஆண்டு தனது தில்லி தர்பாரின் போது திசம்பர் 15 இல் இம்மாநகருக்கான அடிக்கல்லை நாட்டினார்.[4] இதனை இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற பிரித்தானியக் கட்டிடக்கலை வல்லுநர்களான சர் எட்வின் லூட்டியன்சும் சர் எர்பெர்ட்டு பேக்கரும் வடிவமைத்து உருவாக்கினர். புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு "புது தில்லி" என 1927ல் பெயர் சூட்டப்பட்டு[5] 1931 பெப்ரவரி 13 அன்று பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.[6] புது தில்லியிலுள்ள உமாயூனின் சமாதியும், செங்கோட்டையும், குதுப்பின் வளாகமும் உலகப் பாரம்பரியக் களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.[7]
புது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது.[8] மேலும், 21 மில்லியன் மக்கட்தொகையோடு நாட்டின் அதிக மக்கள் கொண்ட மாநகரப் பட்டியலில் முதன்மையாகவும்,[9] நகரமைப்பில், 23 மில்லியன் மக்கள் தொகையோடு, உலக மக்கள்தொகை பட்டியலில் ஏழாவதாகவும் விளங்குகிறது.[10] அமெரிக்க ஆலோசனை நிறுவனமான மெர்சரின் ஆய்வுப்படி, உலகின் விலையுயர்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட 214 நகரங்களில், புது தில்லி 113வது இடத்தைப் பிடித்துள்ளது.[11] இங்கிலாந்தைச் சேர்ந்த லாக்பராக் பல்கலைப்பழகம், புது தில்லியை தங்களது தலையாய உலக நகரங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது.[12] 2011 இல் லண்டன் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனமான நைட் ப்ராங்கின் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 37வது இடத்தையும் பிடித்துள்ளது.[13]