அசிந்தியன்
From Wikipedia, the free encyclopedia
அசிந்தியன்,அதிந்தியன் (சங்கதம்: "நினைவுக்கெட்டாதது", "சொற்பதம் கடந்த பொருள்") என்றும் துங்கால் (பாலி மொழி: "ஐக்கியம்"[1][2]) (Acintya, Atintya, "Tunggal") என்றும் குறிப்பிடப்படுபவர், இந்தோனேசிய இந்து சமயத்தின் முழுமுதற் கடவுள் ஆவார்.
விரைவான உண்மைகள் அசிந்தியன் சங்யாங் வீதி வாசா, வகை ...
அசிந்தியன் சங்யாங் வீதி வாசா | |
---|---|
உதிக்கும் சூரியனாக சித்தரிக்கப்படும் அசிந்தியனின் தோற்றம். பாலி | |
வகை | பரம்பொருள் |
மூடு
இந்தியப் பண்பாட்டின் "பரப்பிரம்மம்" எனும் சொல்லாடலுக்குச் சமனாக இந்தோனேசியாவில் பயன்படும் "அசிந்திய" என்பது, "வயாங்" எனும் புகழ்பெற்ற இந்தோனேசிய நிழல் அரங்காடலில் பரம்பொருளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது.[3] நவீன இந்தோனேசிய இந்துக்கள், "டாங்யாங் துவியேந்திரா"வால் முன்வைக்கப்பட்ட "சங்யாங் வீதி வாசா" ("யாவும் ஒன்றான கடவுள்") என்ற சொல்லாட்சி மூலம் அசிந்தியனைக் குறிப்பிடுகின்றனர்.[4]