அசிரிய இனப்படுகொலை
From Wikipedia, the free encyclopedia
அசிரிய மக்கள் இனப்படுகொலை (Assyrian or Syriac genocide) Syriac: ܩܛܠܥܡܐ ܣܘܪܝܝܐ or ܣܝܦܐ) தற்கால ஈரான் நாட்டை ஆண்ட குவாஜர் பேரரசில் வாழ்ந்த சிரியாக் கத்தோலிக்க கிறித்தவ அசிரிய மக்களை, துருக்கியின் உதுமானியப் பேரரசின் படைகள் மற்றும் குவாஜர் பேரரசின் குர்து படைகளும், முதலாம் உலகப் போருக்கு முன்னரும, பின்னரும், 1914 முதல் 1920 முடிய செய்த இனப்படுகொலைகளைக் குறிக்கும்.[1][2][4][5]
அசிரிய மக்கள் இனப்படுகொலை | |
---|---|
26 மார்ச் 1915 அன்று வாஷிங்டன் டைம்ஸ் நாளிதழில் வெளியிடப்பட்ட அறிக்கை | |
இடம் | உதுமானியப் பேரரசு ஈரானிய குவாஜர் பேரரசு மற்றும் துருக்கியின் உதுமானியப் பேரரசு[1][2] |
நாள் | 1914–1920 |
தாக்குதலுக்கு உள்ளானோர் | அசிரிய மக்கள் |
தாக்குதல் வகை | நாடு கடத்தல், கொத்தாக கொலை செய்தல், இனப்படுகொலை முதலியன முதலியன |
இறப்பு(கள்) | 1,50,000–3,00,000 |
தாக்கியோர் | இளந்துருக்கியர்கள், குவாஜர் பேரரசின் குர்து மக்கள்[3] |
நோக்கம் | சமயச்சிறுபான்மை கத்தோலிக்க சிரியாக் கிறித்தவ அசிரிய மக்களுக்கான எதிரான வெறுப்புணர்வு |
துருக்கியின் உதுமானியப் பேரரசின் இளந்துருக்கியர் இயக்கத்தின் படைகளும் மற்றும் குர்து மக்களும் ஒன்று சேர்ந்து, பண்டைய மேல் மெசொப்பொத்தேமியாவின், தற்கால தென்கிழக்கு துருக்கி மற்றும் தற்கால ஈரானின்வடகிழக்கு பகுதிகளில் வாழ்ந்த சிரியாக் கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த அசிரிய மக்களை, 1914–1920 ஆண்டுகளில் பயங்கரமாக தாக்கியும், வலுக்கட்டாயமாக நாடு கடத்தியும், இனப்படுகொலையும் செய்தனர்.[4]
அனதோலிய கிரேக்க மற்றும் ஆர்மீனிய இனப்படுகொலைகள் போன்று அசிரிய இனப்படுகொலையும் நடைபெற்றது.[6]
அசிரிய இனப்படுகொலையின் போது இறந்தவர்களின் எண்ணிக்கை பல்வேறாக மதிப்பிடப்பட்டுள்ளது. லௌசான்னி உடன்படிக்கையின் படி, 2.75 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை அசிரிய மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக்கணக்கிடப்படுகிறது.[7] வடமேற்கு ஈரான் பகுதியில் மட்டும் 47,000 சிரியாக் கிறித்தவ அசிரியர்கள் கொல்லப்பட்டனர்.
2007-இல் பன்னாட்டு இனப்படுகொலை சங்கத்தின் அறிஞர்களின் மதிப்பீட்டின் படி, 1914 முதல் 1923 முடிய ஒட்டமான் பேரரசின் படைகள் கிறித்துவச் சமயச் சிறுபான்மை இனத்தவர்களான அனதோலிய கிரேக்க இனப்படுகொலை, ஆர்மீனிய இனப்படுகொலை மற்றும் அசிரிய இனப்படுகொலைகள் செய்தனர் என முடிவு செய்தனர்.[8][9]
2007-2008-இல் பன்னாட்டு இனப்படுகொலை கண்காணிப்புத் தலைவர் கிரிகோரி ஸ்டான்டோனின் கூறுகையில், அனதோலியாவின் கிரேக்க, ஆர்மீனிய இனப்படுகொலை மற்றும் அசிரிய இனப்படுகொலைகளை 90 ஆண்டுகளாக தற்கால துருக்கி அரசு (முன்னாள் உதுமானியப் பேரரசு) தொடர்ந்து மறுத்து வருவதுடன், இதுவரை இனப்படுகொலைகளுக்கு பொறுப்பு ஏற்று மன்னிப்பும் கோரவில்லை.[10]
20-ஆம் நூற்றான்டில் உதுமானியப் பேரரசில் இருந்த தற்கால துருக்கி, சிரியா, ஈராக் மற்றும் ஈரான் பகுதிகளில் அசிரிய மக்களின் மக்கள்தொகை பத்து இலட்சமாக இருந்தது.[4] ஆய்வாளர் டேவிட் கௌன்ட், அசிரிய மக்களின் மக்கள்தொகை 6 இலட்சம் எனக்கணித்துள்ளார்.[7] மேலும் உதுமானியப் பேரரசின் லெபனானில் ஆயிரக்கணக்கான மரோனைட் கிறித்தவர்களும், சிறிய அளவில் அசிரியர்களும் இருந்னர். முதலாம் உலகப் போருக்கு முன்னரும், பின்னரும் இசுலாமிய ஒட்டமான் பேரரசில் கிறித்தவர்கள் போன்று சிரியாக் கத்தோலிக்க கிறித்தவ அசிரிய மக்களும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர்.
1840-களில் குவாஜர் பேரரசில் (தற்கால வடக்கு ஈரான்) வாழ்ந்த அசிரிய மற்றும் ஆர்மீனிய மக்களை வலுக்கட்டாயமாக இசுலாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டனர். மதம் மாற விரும்பாதவர்களை இனப்படுகொலை செய்தனர்.[5][4]