அம்பலப்புழா கிருஷ்ணர் கோயில்
கேரள இந்து கோயில் / From Wikipedia, the free encyclopedia
அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் (Ambalappuzha Sri Krishna Temple) என்பது இந்தியாவின், கேரளத்தின், ஆலப்புழா மாவட்டத்தின், அம்பலப்புழாவில் உள்ள ஒரு இந்து கோவிலாகும்.[1][2]
அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | கேரளம் |
அமைவு: | அம்பலப்புழா |
ஆள்கூறுகள்: | 9.3836°N 76.3695°E / 9.3836; 76.3695 |
கோயில் தகவல்கள் | |
வரலாறு | |
அமைத்தவர்: | செம்பகாசேரி பூராடம் திருனாள்-தேவநாராயணன் தம்புரன் |
அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலானது கி.பி 17 ஆம் நூற்றாண்டில் உள்ளூர் ஆட்சியாளரான செம்பகாசேரி பூராடம் திருனாள்-தேவநாராயணன் தம்புரனால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
அம்பலபுழாவில் கோயிலில் உள்ள கிருஷ்ணரின் சிலையானது விஷ்ணுவின் பார்த்தசார்தி வடிவத்தை ஒத்துள்ளது. வலது கையில் சவுக்கையும், இடது கையில் சங்கையும் வைத்திருப்பதாக உள்ளது. 1789 இல் திப்பு சுல்தானின் படையெடுப்பின்போது, குருவாயூர் கோயிலின் கிருஷ்ணர் சிலையானது கொண்டுவரப்பட்டு 12 ஆண்டுகள் அம்பலப்புழா கோவிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இக்கோயிலில் பிரசாதமாக அரிசி, பால் போன்றவற்றால் ஆன பால்பாயாசம், அளிக்கப்படுகிறது. மேலும் இக்கோயில் பிரசாதத்தை குருவாயூரப்பன் தினமும் வந்து ஏற்றுக்கொள்கிறார் என்று நம்பப்படுகிறது.