அரியலூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய அரியலூர் கட்டுரையைப் பார்க்க.
அரியலூர் மாவட்டம் (Ariyalur district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அரியலூர் ஆகும். இந்த மாவட்டம் 1,940.00 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் | |
மாவட்டம் | |
அரியலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் கோவில் | |
அரியலூர் மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | அரியலூர் |
பகுதி | மத்திய மாவட்டம் |
ஆட்சியர் |
திருமதி. பெ. ரமண சரஸ்வதி, இ. ஆ. ப |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
திரு. கா. பெரோஸ் கான் அப்துல்லா |
நகராட்சிகள் | 2 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 4 |
உள்வட்டங்கள் | 15 |
பேரூராட்சிகள் | 2 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 6 |
ஊராட்சிகள் | 201 |
வருவாய் கிராமங்கள் | 195 |
சட்டமன்றத் தொகுதிகள் | 3 |
மக்களவைத் தொகுதிகள் | 1 |
பரப்பளவு | மொத்தம்: 1,940.00 ச.கி.மீ ஊரகம்: 1886.69 ச.கி.மீ நகர்ப்புறம்: 53.31 ச.கி.மீ |
மக்கள் தொகை (2011) |
மொத்தம்: 7,54,894 ஆண்கள்: 3,74,703 பெண்கள்: 3,80,191 |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
608 XXX, 621 XXX |
தொலைபேசிக் குறியீடு |
04329 |
வாகனப் பதிவு |
TN 61 |
கல்வியறிவு |
71.34% |
இணையதளம் | ariyalur |
சோழ மன்னர்களில் ஒருவரான, இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம், இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களமாகும். பிரம்மாண்டமான முதுகெலும்பில்லாத உயிரினங்கள் மற்றும் தாடை மீன்களின் பல புதைபடிவங்கள், டைனோசர் முட்டைகள் போன்றவை இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[1][2][3] புதைபடிவங்களை பாதுகாப்பதற்கு கீழப்பழூரில் ஒரு ஆன்-சைட் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில், சிமெண்ட் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது.