அர்த்தசாஸ்திரம்
From Wikipedia, the free encyclopedia
அர்த்தசாஸ்திரம் என்பது பண்டைய இந்திய நூலாகும். அது அரசாட்சி முறை, பொருளாதாரக் கொள்கை மற்றும் இராணுவ செயல்தந்திரம் போன்றவற்றைப் பற்றிக் கூறுகிறது. அதன் ஆசிரியராக கௌடில்யர்[1],விசுணுகுப்தர்,[2] ஆகிய பெயர்களைக் கொண்ட சாணக்கியர் என்பவர் அடையாளம் கொள்ளப்படுகிறார். (பொ.ஊ.மு. 350-283 வருடங்கள்).[3] அவர் முதலில் தட்சசீல பல்கலைகழகத்தில் ஓர் அறிஞராக இருந்தார். பின்னர் மௌரியப் பேரரசின் பிரதமராகப் பதவி வகித்தார்.