அல்லூரி சீதாராம இராஜு
இந்திய விடுதலை வீரர் / From Wikipedia, the free encyclopedia
அல்லூரி சீதாராம இராஜு (Alluri Sitarama Raju) (பிறப்பு: 1897-98 - இறப்பு:1924 மே 7) இவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு இந்திய புரட்சியாளராவார். 1882 மெட்ராஸ் வனச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பதேரு காட்டில் பழங்குடியினரின் சுதந்திரமான நடமாட்டத்திற்கான அதன் கட்டுப்பாடுகள், அவர்களின் பாரம்பரிய போடு விவசாய முறைமையில் ஈடுபடுவதைத் தடுத்தன. இது சாகுபடியை மாற்றியது . 1922-24ல் ராம்பா கிளர்ச்சிக்கு இராஜு தலைமை தாங்கினார். அப்போது, ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மற்றும் விசாகப்பட்டினம் பிராந்தியங்களின் எல்லைப் பகுதிகளில், இன்றைய ஆந்திரப் பிரதேசத்தில், பிரித்தானிய இராச்சியத்திற்கு எதிராக, பழங்குடி மக்கள் மற்றும் பிற அனுதாபிகள் கொண்ட ஒரு குழு போராடியது. மேலும் ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது. இதனால் இவரை உள்ளூர் மக்கள் "மான்யம் வீருடு" ("காடுகளின் நாயகன்") என்று அழைத்தனர்.
அல்லூரி சீதாராம ராஜீ | |
---|---|
பிறப்பு | 1897 அல்லது 1898 ஆந்திரா, இந்தியா |
இறப்பு | 7 மே 1924 (வயது 25–27) ஆந்திரா, இந்தியா |
இறப்பிற்கான காரணம் | ஆங்கிலேயர்களால் |
கல்லறை | ஆந்திரா, இந்தியா |
அறியப்படுவது | ராம்பா கிளர்ச்சி 1922 |
பட்டம் | மான்யம் வீருடு |
முந்தைய ஒத்துழையாமை இயக்கத்தின் அவசியத்தைக் கூறி பழங்குடி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய இராஜு, சிந்தப்பல்லி, ரம்பச்சோதவரம், தம்மனப்பள்ளி, கிருட்டிணா தேவி பேட்டை, ராஜவோம்மங்கி, அடடீகலா, நர்சிப்பட்டிணம் மற்றும் அன்னவரம் ஆகிய இடங்களில் உள்ள காவல் நிலையங்களில் தாக்குதல் நடத்தினார். துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளைத் கைப்பற்றி, தம்மனப்பள்ளி அருகே இரண்டு பிரித்தன் காவல் அதிகாரிகளை கொன்றார். இராஜு இறுதியில் சிந்தப்பல்லி காடுகளில் ஆங்கிலேயர்களிடம் சிக்கி, பின்னர் ஒரு மரத்தில் கட்டப்பட்டு, கொய்யூரு கிராமத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது கல்லறை கிருட்டிணா தேவி பேட்டை கிராமத்தில் இன்றும் உள்ளது.