ஆகா கானின் கல்லறை
எகிப்தின் அஸ்வான் நகரில் நைல் நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு கல்லறை / From Wikipedia, the free encyclopedia
ஆகா கானின் கல்லறை (Mausoleum of Aga Khan ) என்பது 1957 இல் இறந்த மூன்றாம் ஆகாகான் சர் சுல்தான் முகம்மது ஷாவின் கல்லறை ஆகும். கல்லறை எகிப்தின் அஸ்வான் நகரில் நைல் நதிக்கரையில் அமைந்துள்ளது. எகிப்து, முன்னர் இஸ்மாயிலி சியா வம்சத்தின் பாத்திம கலீபகத்தின் அதிகார மையமாக இருந்தது.
கல்லறையின் கட்டுமானம் 1956இல் தொடங்கி 1960இல் முடிந்தது. [1] ஆகா கானின் மனைவி பேகம் ஓம் அபீபே ஆகா கான், கல்லறை கட்டுமானத்தை ஆரம்பித்தார். இது ஆரம்பத்தில் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தது. இருப்பினும், 1997 ஆம் ஆண்டில் கல்லறையின் உட்பகுதி பொதுமக்களுக்கு மூடப்பட்டது. [2]
ஆகா கானின் கல்லறையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிவப்பு உரோசா வைக்கப்படுகிறது. இது முதலில் பேகம் ஓம் ஆபீபே ஆகா கானால் தொடங்கப்பட்டது.[3]