ஆண்டிகோணஸ்
விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் / From Wikipedia, the free encyclopedia
ஆண்டிகோணஸ் (Antigonus) (பண்டைக் கிரேக்கம்: Ἀντίγονος ὁ Μονόφθαλμος, (கி மு 382–301), மாசிடோனியாவின் பிலிப்பு என்பவரின் மகனும், அலெக்சாண்டரின் முக்கியப் படைத்தலைவரும்; கிரேக்கப் பேரரசின் ஒரு மாகாண ஆளுநரும் ஆவார். இவர் ஒற்றைக் கண் உடையவர்.
விரைவான உண்மைகள் ஆண்டிகோணஸ்Antigonus I Monophthalmus Ἀντίγονος ὁ Μονόφθαλμος, ஆட்சி ...
ஆண்டிகோணஸ் Antigonus I Monophthalmus Ἀντίγονος ὁ Μονόφθαλμος | |
---|---|
Basileus | |
ஆண்டிகோணசின் நாணயம் | |
ஆட்சி | கி மு 306–301 |
முடிசூட்டு விழா | கி மு 306 , ஆண்டிகோணியா (சிரியா) |
முன்னிருந்தவர் | நான்காம் அலெக்சாண்டர் |
பின்வந்தவர் | முதலாம் டெமெட்டிரியஸ் |
அரசி | ஸ்டாடோனிஸ் |
வாரிசு(கள்) | முதலாம் டெமெட்டிரியஸ், பிலிப்பு |
அரச குலம் | ஆண்டிகோணிய வம்சம் |
தந்தை | பிலிப்பு |
பிறப்பு | கி மு எலிமியா, மாசிடோனியா |
இறப்பு | கி மு (வயது 81) லிப்சூஸ் பக்கிரியா |
மூடு
இளமையில் இவர் மாசிடோனியாவின் மன்னர் இரண்டாம் பிலிப்பின் அரசவையில் பணியில் இருந்தவர். கி மு 323இல் அலெக்சாண்டரின் மறைவுக்க்குப் பின் ஹெலனிய காலத்தில் கிரேக்க படைத்தலைவர்கள் மற்றும் ஆளுநர்களிடையே நடந்த தியாடோச்சி வாரிசுமைப் போரின் முடிவில், கிரேக்கப் பேரரசின் மத்திய தரைக் கடலை ஒட்டிய ஐரோப்பிய மற்றும் மேற்காசியாப் பகுதிகளுக்கு தன்னை மன்னராக கி மு 306இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டிகோணியா வம்சத்தை நிறுவினார்.[1]