ஆர்தர் பெர்சிவல்
முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் பிரித்தானிய இராணுவத் தளபதி / From Wikipedia, the free encyclopedia
ஆர்தர் பெர்சிவல் அல்லது ஆர்தர் எர்னஸ்ட் பெர்சிவல் (ஆங்கிலம்; மலாய்: Arthur Ernest Percival; சீனம்: 白思华); (26 டிசம்பர் 1887 – 31 சனவரி 1966) என்பவர் மூத்த பிரித்தானிய இராணுவ அதிகாரி ஆவார். இரண்டாம் உலகப் போரின் போது, மலாயா பிரித்தானிய இராணுவத்தின் தளபதி;[1][2] மற்றும் சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டிருந்த மலாயா பிரித்தானிய இராணுவத்தின் 85,000 நேச நாட்டுப் போர் வீரர்களுக்கும் தளபதியாகப் பொறுப்பு வகித்தவர்.
விரைவான உண்மைகள் ஆர்தர் எர்னஸ்ட் பெர்சிவல்Arthur Ernest Percival, பிறப்பு ...
ஆர்தர் எர்னஸ்ட் பெர்சிவல் Arthur Ernest Percival | |
---|---|
ஆர்தர் பெர்சிவல், மலாயா இராணுவத் தளபதி, மலாயா இராணுவம், டிசம்பர் 1941 | |
பிறப்பு | (1887-12-26)26 திசம்பர் 1887 ஆசுபென்டன், ஆர்ட்போர்ட்சயர், இங்கிலாந்து |
இறப்பு | 31 சனவரி 1966(1966-01-31) (அகவை 78) வெஸ்ட்மின்ஸ்டர், இலண்டன் இங்கிலாந்து |
சார்பு | ஐக்கிய இராச்சியம் |
சேவை/ | பிரித்தானிய இராணுவம் |
சேவைக்காலம் | 1914–1946 |
தரம் | தலைமை லெப்டினன்ட் |
தொடரிலக்கம் | 8785 |
படைப்பிரிவு | எசெக்ஸ் படையணி; செசயர் படையணி |
கட்டளை | மலாயா இராணுவம் (1941–1942) |
போர்கள்/யுத்தங்கள் | முதலாம் உலகப் போர் |
துணை(கள்) | மார்கரெட் எலிசபெத் (தி. 1927; இற. 1953) |
பிள்ளைகள் |
|
மூடு
மலாயாவில் நடந்த போர்களான கோத்தா பாரு போர்; ஜித்ரா போர்; குரூண் போர்; கம்பார் போர்; சிலிம் ரிவர் போர்; கிம்மாஸ் போர்; மூவார் போர்; எண்டாவ் போர் ஆகிய போர்களில் நேச நாட்டுப் படைகளின் தளபதியாகப் பணியாற்றினார். அத்துடன் சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் போருக்கும் பொறுப்பு வகித்தவர் ஆவார்.