![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/PM_Modi_Portrait%2528cropped%2529.jpg/640px-PM_Modi_Portrait%2528cropped%2529.jpg&w=640&q=50)
2019 இந்தியப் பொதுத் தேர்தல்
இந்தியாவின் 17 ஆவது மக்களவைத் தேர்தல் / From Wikipedia, the free encyclopedia
2019 இந்தியப் பொதுத் தேர்தல் (2019 Indian general election) பதினேழாவது மக்களவைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 2019 ஏப்ரல் 11 முதல் மே 19 வரை நடத்தப்பட்டது. மே 23 இல் வாக்குகள் எண்ணப்பட்டு, அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.[1][2][3][4] ஏறத்தாழ 900 மில்லியன் இந்தியக் குடிமக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இத்தேர்தலில் 67% இற்கும் அதிகமானோர் வாக்களித்தனர். இத்தேர்தலிலேயே இந்தியத் தேர்தல் வரலாற்றில் மிக அதிகமானோர் வாக்களித்தனர்.[5] அத்துடன் மிக அதிகமான பெண்கள் இத்தேர்தலிலேயே வாக்களித்திருந்தனர்.[6][குறிப்பு 1]
![]() | ||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
மக்களவையின் அனைத்து 543 இடங்களுக்கும்[lower-alpha 2] அதிகபட்சமாக 272 தொகுதிகள் தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்தோர் | 911,950,734 | |||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 67.40% (![]() | |||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||
![]() தொகுதி வாரியாக முடிவுகள் | ||||||||||||||||||||||||||||||||||
|
இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தேர்தல் முடிவுகளின் படி, மொத்தமாக தேர்தல்கள் நடந்த 542 தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 303 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையைப் பிடித்தது.[8] பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்றது.[9] அதேவேளையில், இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) 52 இடங்களையும், காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 87 இடங்களைக் கைப்பற்றியது. ஏனைய கட்சிகள் 103 இடங்களைக் கைப்பற்றின. மக்களவையில் அதிகாரபூர்வமான எதிர்க்கட்சியாக இருப்பதற்கு ஒரு கட்சி குறைந்தது 10% தொகுதிகளைக் கைப்பற்றியிருக்க வேண்டும், அல்லது நடப்பு நாடாளுமன்றத்தில் குறைந்தது 55 இடங்களைக் கைப்பற்றியிருக்க வேண்டும். இரண்டாவது அதிகப்படியான இடங்களை (52) கைப்பற்றிய இந்திய தேசிய காங்கிரசு கட்சி இரண்டாவது தடவையாக அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி என்ற நிலையைப் பெறத் தவறியது. இதனால், இந்தியாவில் அதிகாரபூர்வமான எதிர்க்கட்சி இம்முறையும் இடம்பெறமாட்டாது.[10][11][12]
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களும் இப்பொதுத் தேர்தல்களுடன் இணைந்து நடத்தப்பட்டன.[13][14]