இந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்து
From Wikipedia, the free encyclopedia
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பு மருந்து (Covid-19 vaccination in India) போடும் செயல் திட்டம் 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 16 ஆம் நாள் முதல் தொடங்கப்பட்டது. கோவிட்-19 நோய்க்குக் காரணமான சார்சு-கோவ்-2 என்ற தீநுண்மிக்கு எதிராக செயல்படும் மருந்தை பகுதி பகுதியாக இந்திய மக்களுக்கு செலுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
முதற்கட்டமாக நாடு முழுவதுமுள்ள சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு தட்டுப்பூசியை செலுத்துவதற்கு இத்திட்டம் முன்னுரிமை அளிக்கிறது. பின்னர் நாட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அல்லது சில குறிப்பிட்ட மருத்துவ நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கு இத்திட்டம் வழிவகுக்கிறது.