![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/65/Oendang-Oendang_Dasar_Negara_Republik_Indonesia.pdf/page1-640px-Oendang-Oendang_Dasar_Negara_Republik_Indonesia.pdf.jpg&w=640&q=50)
இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம்
From Wikipedia, the free encyclopedia
இந்தோனேசிய அரசமைப்புச் சட்டம் (Constitution of Indonesia, இந்தோனேசிய மொழி: Undang-Undang Dasar Negara Republik Indonesia Tahun 1945, UUD '45) இந்தோனேசியாவின் அரசாண்மைக்கான அடிப்படை ஆவணம் ஆகும். இரண்டாம் உலகப் போர் முடிவில் சப்பானியர்களின் கட்டுப்பாட்டிலிருந்து இந்தோனேசியா வெளிவந்த காலத்தில், 1945ஆம் ஆண்டு சூன்,சூலை, ஆகத்து மாதங்களில் எழுதப்பட்டது. இது 1949இல் கூட்டரசு அரசியலமைப்பாலும் 1950இல் தற்காலிக அரசமைப்புச் சட்டத்தாலும் செல்லத்தகாததாக்கப்பட்டாலும் குடியரசுத் தலைவர் சுகர்ணோவின் அறிவிக்கையால் சூலை, 5, 1959இல் மீண்டும் செயற்பாட்டிற்கு வந்தது.
1945 இந்தோனேசியா குடியரசின் நாட்டு அரசியலமைப்பு | |
---|---|
![]() அரசியலமைப்பின் 1946 அச்சுப் பதிப்பு, இந்தோனேசிய தேசியக் குழு புரொபோலிங்கோ கிளையால் வெளியிடப்பட்டது | |
கண்ணோட்டம் | |
அசல் தலைப்பு | Undang-Undang Dasar Negara Republik Indonesia Tahun 1945 |
அதிகார வரம்பு | ![]() |
உருவாக்கப்பட்டது | 1 சூன்–18 ஆகத்து 1945 |
வழங்கப்பட்டது | 18 ஆகத்து 1945 |
அங்கீகரிக்கப்பட்டது | 18 ஆகத்து 1945 |
நடைமுறைப்படுத்திய தேதி | 18 ஆகத்து 1945 |
முறை | ஒருமுக குடியரசு |
அரசாங்க அமைப்பு | |
கிளைகள் | 3 |
நாட்டுத் தலைவர் | குடியரசுத் தலைவர் |
அவைகள் | DPR மற்றும் DPD கொண்ட MPR |
செயலாட்சி | குடியரசுத் தலைவர் தலைமையில் கேபினட் |
நீதித்துறை | MA, MK, மற்றும் KY |
கூட்டாட்சித்துவம் | ஒருமுகம் |
வாக்காளர் குழு | இல்லை |
உட்செலுத்துதல்கள் | 4 |
வரலாறு | |
முதல் சட்டவாக்க அவை | 29 ஆகத்து 1945 |
முதல் செயலாட்சியர் | 18 ஆகத்து 1945 |
முதல் நீதிமன்றம் | 18 ஆகத்து 1945 |
திருத்தங்கள் | 4 |
கடைசியாக திருத்தப்பட்டது | 11 ஆகத்து 2002 |
அமைவிடம் | இந்தோனேசியாவின் தேசிய ஆவணக் காப்பகம், ஜகார்த்தா |
ஆணையிட்டவர் | PPKI |
எழுத்தாளர்(கள்) | BPUPK |
ஊடக வகை | அச்சிடப்பட்ட உரை ஆவணம் |
முழு உரை | |
![]() |
இது சுகர்ணோ பரிந்துரைத்த பஞ்சசீலக் கொள்கைகளை முன்னிறுத்துகிறது. இதன்படி செயற்பிரிவு, சட்டப்பிரிவு, நீதிப் பிரிவுகளுக்கிடையே குறைந்த பிரிவினையே உள்ளது. இந்த அரசியலமைப்பு "நாடாளுமன்ற பண்புகளுடனான குடியரசுத் தலைவருக்குரியதாக" விவரிக்கப்படுகின்றது.[1] 1998இல் நடந்த இந்தோனேசியப் புரட்சியை அடுத்து குடியரசுத் தலைவர் சுகார்த்தோ பதவி விலகிய பின்னர்பல அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன; இந்தோனேசிய அரசமைப்பில் பல திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு, அரசின் மூன்று பிரிவுகளிலுமே மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன; கூடுதல் மனித உரிமைகளுக்கான சட்டங்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டன.