இரையகக்குடலிய அழற்சி
வயிறு அல்லது சிறுகுடல் அழற்சி அமைந்த மருத்துவ நிலைமை / From Wikipedia, the free encyclopedia
இரைப்பைக் குடலழற்சி (Gastroenteritis), அல்லது தொற்றுவழி வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று வலி என்பது வயிறு, சிறு குடல் ஆகிய இரண்டுடனும் தொடர்பு கொண்ட இரைப்பைத் தடவழி அழற்சியாகும் ஆகும்.[8] இதன் அறிகுறிகளாக, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி ஆகியன அமையலாம்.[1] இதனால், காய்ச்சல், சத்தின்மை, நீரிழப்பு கூட ஏற்படலாம்.[2][3] இந்நோய் இயல்பாக இருவாரங்களுக்கும் குறைவாகவே நீடிக்கும்.[8] இது ஐக்கிய அமெரிக்காவில் "வயிற்றுக்காய்ச்சல்" எனப்பட்டாலும், இது குளிர்காய்ச்சல் அன்று.[9]
இரைப்பைக் குடலழற்சி Gastroenteritis | |
---|---|
ஒத்தசொற்கள் | குடல், வயிற்றுப்போக்கு, வயிற்று நச்சுயிரி, வயிற்றுக் காய்ச்சல், குடற்காய்ச்சல், இரைப்பைக் குடலழற்சி |
இரைப்பைக் குடலழற்சி நச்சுயிரிகள்: A = rotavirus, B = adenovirus, C = norovirus and D = astrovirus. உருவளவு ஒப்பீட்டுக்காக அனைத்து நச்சுயிரித் துகள்களும் ஒரே உருப்பெருக்கத்தில் காட்டப்பட்டுள்ளன. | |
சிறப்பு | தொற்று நோய், இரையகக் குடலியவியல் |
அறிகுறிகள் | வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்று வலி, காய்ச்சல்[1][2] |
சிக்கல்கள் | நீரிழப்பு[2][3] |
காரணங்கள் | நச்சுயிரிகள், குச்சுயிரிகள், ஒட்டுண்ணிகள், பூஞ்சைகள்[2][4] |
நோயறிதல் | அறிகுறிகள் சார்ந்து, சிலவேளைகளில் மல ஓர்வு[2] |
ஒத்த நிலைமைகள் | வயிற்று அழற்சி நோய், பிறழுறிஞ்சல் நோய்த்தொகை, பால்மப் பொறுதியின்மை[5] |
தடுப்பு | கைக் கழுவுதல், தூய நீர் குடித்தல், முறையான மாந்தக் கழிவு வெளியேற்றம், முலைப்பாலூட்டல்[2] |
சிகிச்சை | வாய்வழி நீரூட்டக் கரைசல் ( நீர், உப்பு, சர்க்கரைக் கரைசல்), சிரையூடு பாய்மம் செலுத்தல்[2] |
நிகழும் வீதம் | 2.4 பில்லியன் (2015)[6] |
இறப்புகள் | 1.3 மில்லியன் (2015)[7] |
இரைப்பைக் குடலழற்சி வழக்கமாக நச்சுயிரிகளால் ஏற்படுகிறது;[4] என்றாலும், வயிற்றுக் குச்சுயிரிகள், ஒட்டுண்ணிகள் பூஞ்சைகள் கூட இரைப்பைக் குடலழற்சியை உருவாக்கலாம்.[2][4] குழந்தைகளில் கடும் இரைப்பைக் குடலழற்சியை உருவாக்கும் மிகப் பொதுக்காரணியாக, சுருள்நச்சுயிரி அமைகிறது.[10].அகவை முதிர்ந்தோரில் இந்நோய், நோரோநச்சுயிரியாலும் காம்பைலோபாக்ட்டர் எனும் குச்சுயிரியாலும் பொதுவாக ஏற்படுகிறது.[11][12] சரியாக சமைக்காத உணவை உண்ணுதல், மாசுற்ற நீரைக் குடித்தல், இத்தொற்றால் நோயுற்றவருடன் நெருங்கிப் பழகுதல் ஆகிய செயல்பாடுகளால் நோய் பரவும்.[2] மருத்துவம் பொதுவாக நோயறிதலைச் சார்ந்திராததால், மருத்துவ ஓர்வுகள் ஏதும் வேண்டியதில்லை.[2] ஏழைநாட்டு இளங்குழந்தைகளுக்கு நோயைத் தடுக்க, சவர்க்காரத்தால் கையைக் கழுவல், காய்ச்சிவடித்த நீரைக் குடித்தல், குழந்தைகளுக்கு முலைப்பாலூட்டல் இவற்றோடு,[2] மாந்தக் கழிவுகளை முறையாக வெளியேற்றல் போன்ற நடைமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு நோய்தணிக்க, சுருள்நச்சுயிரி ஊசி போடல் பரிந்துரைக்கப்படுகிறது.[2][10] போதுமான நீர்மங்கள் ஊட்டியும் மருத்துவம் மேற்கொள்ளப்படுகிறது.[2] மிதமான இடைநிலை நேர்வுகளில் வாய்வழி நீரூட்டத்தால் (நீர், உப்பு,சருக்கரைக் கரைசலால்) நோயைத் தீர்க்கலாம்.[2] In those who are breastfed, continued breastfeeding is recommended.[2] கடும் நோய் நேர்வுகளில் சிரையூடு நீர்மம் செலுத்தப்படலாம்.[2] இந்த நீர்மங்கள் மூக்கூடான குழல்வழி வயிற்றுக்குச் செலுத்தப்படலாம்.[13] குழந்தைகளுக்கு துத்தநாக நிரப்பூட்டமும் பரிந்துரைக்கப்படுகிறது.[2] பொதுவாக, உயிர்கொல்லி மருந்துகள் தேவைப்படுவதில்லை.[14] என்றாலும், காய்ச்சலும் குருதி வயிற்றுப் போக்கும் உள்ள குழந்தைகளுக்கு உயிர்கொல்லி மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.[1]
இது ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாசடைந்த உணவு, நீரின்வழி பரவுகிறது. உலகெங்கும், இரைப்பைக் குடலழற்சிக்குச் சரியான மருத்துவம் கிடைக்கப் பெறாததால் ஒவ்வோர் ஆண்டும்[15] ஐந்திலிருந்து எட்டு மில்லியன் மக்கள் வரை உயிரிழக்கின்றனர். ஐந்து வயதிற்கும் குறைவான குழந்தைகளும் சிறார்களும் இறந்துபட இதுவே முதன்மையான காரணமாக உள்ளது.[16]
முதன்மையான பிற நச்சுயிரிகளில் அண்ணீரக நச்சுயிரி, உடுவுரு நச்சுயிரி ஆகியவையும் அடங்கும்.
இரப்பைக் குடலழற்சி 2015 இல் இரண்டு பில்லியன் பேருக்கு ஏற்பட்டு, அவர்களில் 1.3 மில்லியன் பேர் உலகளாவியநிலையில் இறந்துள்ளனர்.[6][7] இந்தத் தொற்றால் வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகளே பேரளவில் தாக்கப்படுகின்றனர்.[17] ஐந்து அகவைக்கும் குறைவான குழந்தைகளில், 2011 இல் கிட்டதட்ட 1.7 பில்லியன் தொற்றுகள் ஏற்பட்டு, அவர்களில் ஏறத்தாழ 700,000 இறப்புகள் ஏற்பட்டன.[18] வளரும் நாடுகளில், இரண்டு அகவைக்கும் குறைவான குழந்தைகளில் ஓராண்டில் அடிக்கடி ஆறுதடவை அல்லது அதற்கும் மேலாக தொற்று ஏற்படுகிறது.[19] நோயெதிர்ப்புத்திறன் வளர்ச்சியால், அகவை முதிர்ந்தோரில் அவ்வளவு பரவலாக ஏற்படுவதில்லை.[20]