இறைமறுப்பு
From Wikipedia, the free encyclopedia
இறைமறுப்பு அல்லது நாத்திகம் (Atheism) என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்காத கொள்கையாகும். சமய நம்பிக்கை போன்றே இந்தக் கொள்கையும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. எனினும் சமயம் போன்று கட்டமைப்பு, சடங்குகள், புனித நூல்கள் என்று எதுவும் இதற்கு இல்லை.
தமிழ்ச் சூழலில் கடவுள் நம்பிக்கையின்மை தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. பண்டைக்காலத்தில் உலகாயுதர் கடவுள் நம்பிக்கையின்மை கொள்கை உடையவர்கள். அண்மைக்காலத்தில் பெரியார் (ஈ. வெ. இராமசாமி) தோற்றுவித்து தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவை இந்தக் கொள்கையை உடையன. மார்க்சிய அல்லது இடதுசாரி நிலைப்பாடுகள் உடைய பலரும் இந்தக் கொள்கை உடையவர்கள்.