இறைவாக்கினர்
From Wikipedia, the free encyclopedia
இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசி (prophet) எனும் நபர் இயற்கைக்கு அப்பாற்பட்ட அல்லது தெய்வீகத் தன்மை கொண்ட பண்பு கொண்டவர் எனவும், அதற்காக பேசுபவர் எனவும் சமயங்களினால் நோக்கப்படுகின்றார். இவர் மானிடத்திற்கு இடையிலான சேவையைச் செய்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்து புதிதாகப் பெற்ற அறிவை அல்லது செய்தியை மக்களுக்கு வழங்குபவர் என நோக்கப்படுகின்றார்.[1][2] இவ்வாறு அவரிடமிருந்து பெறப்படும் செய்தி இறைவாக்கு அல்லது தீர்க்கதரிசனம் எனப்படும்.