இலீசி ஒத்தெர்மா
வானவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
இலீசி ஒத்தெர்மா (Liisi Oterma) (6 ஜனவரி 1915 – 4 ஏப்பிரல் 2001) ஒரு பின்லாந்து வானியலாளர் ஆவார். இவரே பின்லாந்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.[2]
காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல் |
இவர் பல வால்வெள்ளிகளை இணையாக்க் கண்டுபிடித்தார். இவற்றில் 38P/சுட்டீபநொத்தெர்மா, 39P/ஒத்தெர்மா 139P/வாயிசாலா–ஒத்தெர்மா ஆகிய அலைவியல்பு வால்வெள்ளிகளும் அடங்கும். இவர் 1938 முதல் 1953 வரை 54 சிறுகோள்களையும் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. இவர் அம்மையக் கண்டுபிடிப்புப் பட்டியலில் 153 ஆம் தரவரிசையில் உள்ளார்.[1]
பின்லாந்து வானியலாளர் யுரியோ வாயிசாலா 1938 இல் கண்டுபிடித்த கில்டியச் சிறுகோளாகிய 1529 ஒத்தெர்மா, இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3]