எகிப்தின் முப்பதாம் வம்சம்
From Wikipedia, the free encyclopedia
எகிப்தின் முப்பதாம் வம்சம் (Thirtieth Dynasty of Egypt - Dynasty XXX) (ஆட்சிக் காலம்:கிமு 380 - கிமு 343) பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட ஐந்தாம் வம்சமும், எகிப்திய மக்களின் இறுதி வம்சமும் ஆகும். இவ்வம்சத்தினர் எகிப்தை கிமு 380 முதல் 343 முடிய 43 ஆண்டுகள் ஆண்டனர். கிமு 380-இல் இருபத்தி ஒன்பதாம் வம்ச பார்வோன் இரண்டாம் நெபரிடீசை வீழ்த்தி எகிப்தில் முப்பதாம் வம்சத்தை நிறுவியவர் முதலாம் நெக்தனெபோ ஆவார். கிமு 343-இல் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர் மூன்றாம் அர்தசெராக்சஸ், எகிப்தின் முப்பதாம் வம்சத்தினரை வென்று, பண்டைய எகிப்தை பாரசீகத்துடன் இணைத்து கொண்டார். அது முதல் எகிப்து பாரசீகத்தின் ஒரு மாகாணமாக விளங்கியது. எகிபதை ஆண்ட பார்சீகப் பேரரசர்களை எகிப்தின் முப்பத்தி ஒன்றாம் வம்சத்தவர்கள் என வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
விரைவான உண்மைகள் பிந்தைய கால எகிப்திய இராச்சியம்30-ஆம் வம்சம், தலைநகரம் ...
பிந்தைய கால எகிப்திய இராச்சியம் 30-ஆம் வம்சம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
கிமு 380–கிமு 343 | |||||||||
முதலாம் நெக்தனெபோவின் சிற்பம் | |||||||||
தலைநகரம் | செபென்னிதோஸ் | ||||||||
பேசப்படும் மொழிகள் | எகிப்திய மொழி | ||||||||
சமயம் | பண்டைய எகிப்திய சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
வரலாற்று சகாப்தம் | பாரம்பரியக் காலம் | ||||||||
• பார்வோன் இரண்டாம் நெபாருதை வெளியேற்றுதல் | கிமு 380 | ||||||||
• பெலுசியம் போர் | கிமு 343 | ||||||||
|
மூடு