எல்பின்சுடோன்
From Wikipedia, the free encyclopedia
எல்பின்சுடோன்(ஆங்கிலம்:Elphinstone, Mount stuart) (6 அக்டோபர் 1779 - 20 நவம்பர் 1859) எடின்பரோவில் கல்வி பயின்றார். 1795 இல் வங்காளச் சிவில் அதிகார வர்க்கத்தில் வேலையை எற்றுப் பிறகு, 1804 இல் நாகபுரியிலும், 1811 இல் பூனாவிலும் சுதானிகராகா நியமிக்கப் பட்டார். 1817 இல் பேசுவா ஆங்கிலேயரோடு போர் தொடங்கியபோது, கர்க்கீ(Kirkee) என்னும் இடத்தில், இவர் தலைமை ஏற்று, அப்போரை நடத்தி, வெற்றி பெற்றார். ஆங்கிலேயர் பேசுவாவை பதவியில் இருந்து விலக்கி, 'பேசுவா' ஆட்சி புரிந்த பகுதிகளைக் கைப்பற்றினர். பின்னர், எல்பின்சுடோன் ஆணையராக இருந்து, அப்பகுதிகளைச் செம்மையாக ஆண்டார்.
எல்பின்சுடோன் | |
---|---|
![]() | |
மும்பையின் ஆளுநர் | |
பதவியில் 1 நவம்பர் 1819 – 1 நவம்பர் 1827 | |
தலைமை ஆளுநர் | Francis Rawdon-Hastings William Amherst |
முன்னையவர் | சர் இவான் நேப்பியன் |
பின்னவர் | Sir John Malcolm |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 அக்டோபர் 1779 Dumbarton, Dumbartonshire, இசுக்கொட்லாந்து |
இறப்பு | 20 நவம்பர் 1859(1859-11-20) (அகவை 80) Hookwood, இங்கிலாந்து |
தேசியம் | பிரித்தானியர் |
முன்னாள் கல்லூரி | இராயல் உயர்நிலைப் பள்ளி |
வேலை | இராஜதந்திரி, வரலாற்று ஆய்வாளர் |
1819 முதல் 1827 வரை மும்பையின் துணைநிலை ஆளுநர்(lieutenant governer) பதவியில் திறம்பட செயலாற்றினார். அக்காலத்தில் இவர், எல்பின்சுடன் சட்டத்தை (Elphinstone code) வகுத்தார். இவர் இந்தியாவில் அரசாங்கக் கல்வி வளர்ச்சியை நன்கு திட்டமிட்டு வளர்த்தார். இந்தியர் இவரைப் பாராட்டி, இவர் பெயரால்உ ஒரு கல்லூரியை நிறுவினர். ஐரோப்பியர் இவரது உருவச்சிலையை மும்பையில் அமைத்தனர். 1829 இல் இவர் இங்கிலாந்து திரும்பினர். இம்முறை, இவர் பொதுஆளுநர் (Governer general) பதவியை மறுத்தார். காபுல் இராச்சிய வரலாறு, இந்திய வரலாறு, கிழக்கில் பிரித்தானிய செல்வாக்கு எழுச்சி என்பன இவர் எழுதிய நூல்கள் ஆகும். இவர் எழுதிய இந்திய வரலாறு சிறந்த ஆவாண நூல்களாகக் கருதப்படுகிறது.
இவர் பெயரால் ஆசுத்திரேலியா நாட்டில் ஒரு நகரம் உருவாக்கப்பட்டது. இலண்டனில் புனிதர் பவுல் தேவாலயத்தில்( St Paul's Cathedral) ஒரு சிலை இவருக்கு வைத்துள்ளனர்.[1]