ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை)
கத்தோலிக்க திருத்தந்தை (1215-1296) / From Wikipedia, the free encyclopedia
புனித ஐந்தாம் செலஸ்தீன் (Pope Saint Celestine V) என்பவர் (1215 - மே 19, 1296) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் சூலை 5, 1294 முதல் திசம்பர் 13, 1294 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 192ஆம் திருத்தந்தை ஆவார்[1]. சுமார் ஐந்து மாதங்கள் மட்டுமே திருத்தந்தைப் பொறுப்பை வகித்த செலஸ்தீன், தாமாகவே முன்வந்து திருத்தந்தைப் பணியைத் துறந்ததற்காக வரலாற்றில் நினைவுகூரப்படுகிறார்.
விரைவான உண்மைகள் புனித ஐந்தாம் செலஸ்தீன் Saint Celestine V, ஆட்சி துவக்கம் ...
புனித ஐந்தாம் செலஸ்தீன் Saint Celestine V | |
---|---|
192ஆம் திருத்தந்தை | |
ஐந்தாம் செலஸ்தீன் திருத்தந்தையாக முடிசூட்டப்பெறுதல் | |
ஆட்சி துவக்கம் | சூலை 5, 1294 |
ஆட்சி முடிவு | திசம்பர் 13, 1294 |
முன்னிருந்தவர் | நான்காம் நிக்கோலாஸ் |
பின்வந்தவர் | எட்டாம் போனிஃபாஸ் |
திருப்பட்டங்கள் | |
ஆயர்நிலை திருப்பொழிவு | ஆகத்து 29, 1294 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | பியேத்ரோ ஆஞ்செலேரியோ (Pietro Angelerio) |
பிறப்பு | 1215 இசேர்னியா அருகே (சிசிலி இராச்சியம்) |
இறப்பு | மே 19 1296 (அகவை 80–81) ஃபெரெந்தீனோ, திருத்தந்தை நாடுகள் |
புனிதர் பட்டமளிப்பு | |
திருவிழா | மே 19 |
புனிதர் பட்டம் | மே 5, 1313 |
செலஸ்தீன் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
மூடு