ஒரானியெசுத்தாடு
From Wikipedia, the free encyclopedia
ஒரானியெசுத்தாடு (Oranjestad, டச்சு ஒலிப்பு: [oːˈrɑɲəˌstɑt]) அரூபாவின் தலைநகரமும், அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். அரூபா தீவு நாட்டின் மேற்கு முனைக்கு அருகே தெற்குக் கரையில் இது அமைந்துள்ளது. உள்ளூர் பப்பியாமெந்தோ மொழியில் இது "பிலாயா" என அழைக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை அண்ணளவாக 30,000 என மதிப்பிடப்பட்டிருந்தது.[1]