கங்கோத்திரி கோயில்
From Wikipedia, the free encyclopedia
கங்கோத்திரி கோயில் இந்தியாவின் இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில், உத்தரகாசி மாவட்டத்தில்[1] கங்கோத்திரி மலையில் 3,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கங்கை ஆற்றின் பிறப்பிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கங்கை அம்மனுக்கு இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
கங்கோத்திரி கோயில் | |
---|---|
கங்கோத்திரி கோயில் | |
ஆள்கூறுகள்: | 30.98°N 78.93°E / 30.98; 78.93 |
பெயர் | |
பெயர்: | கங்கோத்திரி கோயில் |
தேவநாகரி: | गंगोत्री मंदिर |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்தரகாண்ட் |
மாவட்டம்: | உத்தரகாசி மாவட்டம் |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கங்கை அம்மன் |
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சார்-தாம் எனும் நான்கு கோயில்களுள் கங்கோத்திரி கோயிலும் ஒன்று. மற்ற கோயில்கள்: யமுனோத்திரி கோயில், கேதார்நாத் கோயில், மற்றும் பத்ரிநாத் கோயில்.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் அமர்சிங் தாபா எனும் நேபாள இராணுவ தளபதி[2] (கூர்க்கா படைத்தலைவர்), மிகச்சிறிதாக இருந்த இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். கோமுகம் எனும் பனிச்சிகரங்களிலிருந்து துவங்கும் கங்கை ஆற்றுக்கு பாகீரதி என்றும், தேவபிரயாகை நகரில் அலக்ந்தா ஆற்றுடன் கலக்கும் போது இவ்வாற்றுக்கு கங்கை ஆறு என்றும் பெயர்.