![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Kadalundi_Kadavu.jpg/640px-Kadalundi_Kadavu.jpg&w=640&q=50)
கடலுண்டி ஆறு
மலப்புறம் மாவட்டத்தில் பாயும் முக்கிய நதிகளில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
கடலுண்டி ஆறு (Kadalundi_river) ( கடலுண்டிபுழா ) என்பது இந்திய மாநிலமான கேரளாவில் மலப்புறம் மாவட்டம் வழியாக பாயும் நான்கு முக்கிய நதிகளில் ஒன்றாகும். காளியாறு, பாரதப்புழா, திரூர் ஆறு ஆகியவை மற்ற மூன்று ஆறுகளாகும்.[1] மழையால் நீர்பெறும் இந்த ஆறு 130 கிலோமீட்டர் (81 மைல்) நீளம் கொண்டது. மேலும், மாவட்டத்தின் மிக முக்கியமான நதிகளில் ஒன்றாகும்.. [2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ad/Kadalundi_Kadavu.jpg/640px-Kadalundi_Kadavu.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a3/Kadalundi_river%2C_Malappuram.jpg/640px-Kadalundi_river%2C_Malappuram.jpg)
கடலுண்டி ஆறு கேரளாவின் ஐந்தாவது நீளமான ஆறாகும். கடலுண்டி ஆறு மேலாற்றூர், பாண்டிக்காடு, மஞ்சேரி, மலப்புறம், பாணக்காடு, பாரப்பூர், வேங்கரா, திரூரங்காடி, பறப்பனங்காடி, வள்ளிக்குன்னு வழியாகப் பாய்ந்து கடலுண்டியில் அரபிக்கடலில் கலக்கிறது [3] இது ஒலிப்புழா ஆறும் வேலியாறும் சங்கமத்தால் உருவாகிறது. இது அமைதி பள்ளத்தாக்கின் மேற்கு எல்லையில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தோன்றி மலப்புறம் மாவட்டம் வழியாகப் பாய்கிறது. இதற்கு ஓலிபுழா மற்றும் வேலியாறு என்ற இரண்டு முக்கிய துணையாறுகள் உள்ளன. இவை இரண்டும் ஒன்றிணைந்து மேலாற்றூருக்கு அருகிலுள்ள கடலுண்டி ஆறாக மாறுகிறது. கடலுண்டி ஆறு வரலாற்றுப் பகுதிகளான ஏறநாடு , வள்ளுவநாடு வழியாகச் செல்கிறது. கடலுண்டி ஆறு 1274 கிமீ² பரப்பளவை வடிகட்டுகிறது. மேலும், 120 கிமீ நீளம் கொண்டது. [4] கடலுண்டி பறவைகள் சரணாலயம் ஆறு அரபிக்கடலில் பாயுமிடத்தில் பரவியிருக்கிறது. ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட உள்நாட்டுப் பறவைகளும், சுமார் 60 வகையான புலம்பெயர்ந்த பறவைகளும் இங்கு வருகின்றன. [5]