கரும்பு வில்
From Wikipedia, the free encyclopedia
இந்து மதத்தில் 'மன்மதன் (காமன்)' என்ற கடவுள், ஆண்- பெண் இடையே நடைபெறும் உடல்சார் உறவுகளின் இன்பத்தைத் தோற்றுவிப்பவனாகவும், வழங்குபவனாகவும், அவ்வின்பத்திற்கு உரியவனாகவும் கருதப்படுகிறான். இவனுடைய மனைவு 'இரதி தேவி' என்ற பேரழகி ஆவாள்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c8/Kamadeva1.jpg/250px-Kamadeva1.jpg)
இந்த மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பான்; அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியும்; அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக) எய்துகொண்டிருப்பான்; அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவருக்கே 'காம இச்சை' மேலோங்கும் எனச் சித்தரிக்கப்படுகிறது. தமிழ்த் திரைப்படப்பாடல் ஒன்றில் 'தாங்குமோ என் தேகமே.... மன்மதனின் மலர்க் கணைகள் தோள்களிலே....' என்ற பாடல் வரிகள் உள்ளதைக் காணலாம். இந்த மலர்க் கணைகளே மன்மதன் அம்பு எனப்படுகின்றன.
![]() |
இந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |