காக்கை பாடினியார் நச்செள்ளையார்
From Wikipedia, the free encyclopedia
காக்கை பாடினியார் நச்செள்ளையார் கடைச்சங்ககாலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 12 உள்ளன.
இவரின் பாடல்கள் எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன.
- குறுந்தொகை 210
- புறநானூறு 278
- பதிற்றுப்பத்து ஆறாம்பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய 10 பாடல்கள். (இதன் பதிகம் பிற்காலத்தது)
நச்செள்ளை என்பது இவரின் இயற்பெயர் ஆகும். இப்பெயரில் பலர் இருந்த காரணத்தால் காக்கையைப் பாடிய இவர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் என அழைக்கப்பெற்றுள்ளார். குறுந்தொகையில் இவர் தம் பாடல் ஒன்றில் 'விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே’ என்று குறிப்பிட்டுள்ளமையால் இவரைக் காக்கை பாடினியார் என்று குறிப்பிட்டுள்ளனர். காக்கைக்கு உணவிடும் வழக்கம் சங்க காலத்தில் இருந்தது என்பதற்கு இப்பாடல் சான்று. அக்காக்கைக்கு வைக்கப்படும் சோறு ‘பலி’ எனக்குறிக்கப்பெற்றுள்ளது. காக்கை கத்தும் ஒலியைக் கரைதல் என்றும் இப்பாடல் குறிப்பிடுகிறது.
இவர் தொண்டி என்ற ஊரைப் பாடியதால் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவராக இருக்கலாம். இவர் பதிற்றுப் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடியதால் சேர நாட்டைச் சார்ந்தவர் என்ற கருத்தும் உள்ளது. பதிற்றுப் பத்தின் பதிகம் இவரை ‘அடங்கிய கொள்கைக் காக்கைப் பாடினியார்’ என்று குறிப்பிடுகின்றது. இதன்காரணமாக சான்றாண்மைத் தன்மை வாய்ந்தவராக இப்புலவர் அறியப்பெறுகின்றார்.
இவரது பாடல் கூறும் செய்திகள்: