கார்பன் சுழற்சி
From Wikipedia, the free encyclopedia
கார்பன் சுழற்சி (carbon cycle) என்பது பூமியின் உயிர்க்கோளம், மண்கோளம், புவிக்கோளம், நீர்க்கோளம் மற்றும் புவியின் வளிமண்டலத்தில் நிகழும் கார்பன் பரிமாற்ற உயிர்ப்புவிவேதியியல் சுழற்சி ஆகும். கார்பன் என்பது உயிரியல் சேர்மங்களின் முக்கிய அங்கமாகவும் சுண்ணாம்புக் கல் போன்ற பல கனிமங்களின் முக்கிய அங்கமாகவும் உள்ளது. நைட்ரசன் சுழற்சி மற்றும் நீர் சுழற்சியுடன் சேர்ந்து , கார்பன் சுழற்சியும் பூமியை உயிர்வாழும் திறன் கொண்ட கோளாக மாற்றுவதற்குரிய முக்கியமான நிகழ்வுகளின் வரிசையை உள்ளடக்கியுள்ளது. உயிர்க்கோளம் முழுவதும் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும் கார்பனின் இயக்கத்தையும் அத்துடன் கார்பன் மூழ்கிகலில் இருந்து கார்பனை படிப்படியாக ஒதுக்கி வெளியிடும் நீண்டகால செயல்முறைகளை கார்பன் சுழற்சி விவரிக்கிறது. நிலம் மற்றும் கடலில் உள்ள கார்பன் மூழ்கிகள் ஒவ்வொன்றும் தற்போது ஒவ்வோர் ஆண்டும் மானுடவியல் கார்பன் உமிழ்வுகளில் கால் பங்கை எடுத்துக் கொள்கின்றன.
புவிக்கோளத்தில் இருந்து நிலக்கரி, பெட்ரோலியம் மற்றும் எரிவாயு போன்ற புதைபடிவ கார்பனை பிரித்தெடுத்தல், சிமெண்ட்டு உற்பத்தி போன்ற நடவடிக்கைகளால் நில பயன்பாட்டை மாற்றியமைப்பதன் மூலம் மனிதர்கள் பல நூற்றாண்டுகளாக உயிரியல் கார்பன் சுழற்சியை சீர்குலைத்து வந்துள்ளனர்.[1][2] வளிமண்டலத்தில் உள்ள கார்பனீராக்சைடு 2020 ஆம் ஆண்டில் தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட கிட்டத்தட்ட 52% அதிகரித்துள்ளது.[3][4] சூரியனால் அளிக்கப்படும் வெப்பம் வளிமண்டலம் மற்றும் பூமியின் மேற்பரப்பில் வெப்பநிலை உயர இது கட்டாயப்படுத்தியது.[3][4] இவ்வாறு அதிகரித்த கார்பனீராக்சைடால் கார்பானிக் அமிலம் மற்றும் பிற சேர்மங்களும் கரைந்து கடல் மேற்பரப்பின் அமிலத்தன்மையை சுமார் 30% வரை அதிகரிக்கச் செய்கின்றன. இதனால் கடலின் அடிப்படை வேதியியலே மாற்றமடைகிறது.[5][6] புதைபடிவ கார்பனின் பெரும்பகுதி கடந்த அரை நூற்றாண்டில் அதிகமாக பிரித்தெடுக்கப்பட்டது. பிரித்தெடுக்கப்படும் இவ்விகிதங்கள் தொடர்ந்து வேகமாக அதிகரித்து மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்திற்கு பங்களிக்கிறது.[7][8] புவி அமைப்பின் பரந்த ஆனால் வரையறுக்கப்பட்ட நிலைமத்தின் காரணமாக கார்பன் சுழற்சிக்கும், மனித நாகரிகத்தை விமர்சன ரீதியாக செயல்படுத்தும் உயிர்க்கோளத்திற்குமான மிகப் பெரிய விளைவுகள் இன்னும் விரிவடையத் தயாராக உள்ளன . [1][9][10] இந்த இயற்கை அமைப்பில் சமநிலையை மீட்டெடுப்பது பன்னாட்டு முன்னுரிமையாகும். இது பாரிசு காலநிலை ஒப்பந்தம் மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு 13 ஆகிய இரண்டு நிகழ்வுகளிலும் விவரிக்கப்பட்டுள்ளது.