காற்றுச் சுழலி
From Wikipedia, the free encyclopedia
காற்றுச்சுழலி அல்லது காற்று விசையாழி (wind turbine, தமிழில் இது காற்றாலை என்றும் சில வேளைகளில் அழைக்கப்படுகிறது) என்பது காற்றின் இயக்க ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் ஒரு இயந்திரம் ஆகும். காற்றாலைப் பண்ணைகளில் நிறுவப்படும் பல நூற்றுக்கணக்கான பெரிய விசையாழிகள் இப்போது 650 கிகாவாட்டு ஆற்றலை உற்பத்தி செய்கின்றன, அத்துடன் ஆண்டுதோறும் ஆற்றல் 60 கிகாவாட்டால் அதிகரிக்கப்படுகின்றது.[1] காற்றுச் சுழலிகள் இடைவிடாத புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் முக்கிய மூலமாக உள்ளன, மேலும் பல நாடுகளில் ஆற்றல் செலவைக் குறைக்கவும், புதைபடிவ எரிபொருட்களில்ள் நம்பியிருப்பதைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. ஒளிமின்னழுத்த, நீர், புவிவெப்ப, நிலக்கரி மற்றும் எரிவளிம ஆற்றல் மூலங்களுடன் ஒப்பிடுகையில், 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி, காற்றானது "மிகக்குறைந்த பைங்குடில் வளிம உமிழ்வுகள், குறைந்த நீர் நுகர்வுத் தேவைகள் மற்றும் மிகவும் சாதகமான சமூகத் தாக்கங்களைக் கொண்டது" என்று கூறுகிறது.[2]
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
படகுகள் அல்லது கூண்டுவண்டிகளுக்கான துணை ஆற்றலுக்கான மின்கல மின்னூட்டல், போக்குவரத்து எச்சரிக்கைப் பலகைகளை இயக்குதல் போன்ற பயன்பாடுகளுக்கு சிறிய காற்றுச் சுழலிகள் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய காற்றுச் சுழலிகள், பயன்படுத்தப்படாத மின்சாரத்தை மின் வலைப்பின்னல் வழியாக பயன்பாட்டு வழங்குனருக்கு மீண்டும் விற்பனைக்கு விடுவதன் மூலம் உள்நாட்டு மின் விநியோகத்திற்கு பங்களிக்க முடியும்.
தற்கால பொறியியல் மற்றும் தொழினுட்பமுறைகளில் காற்றுச்சுழலியின் தேவை அதிகரிப்பிற்கு ஏற்றாற்போல, அது கிடைமட்ட மற்றும் செங்குத்து அச்சு சுழலிகளாக வகைபடுத்தப்படுகிறது. காற்றின் மூலம் ஆற்றலானது பெறப்படுவதால் இச்செயல்முறை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது இந்த ஆற்றலை மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்து பயன்படுத்திக்கொள்ள இயலும்.