காவல் தூதரை நோக்கி செபம்
From Wikipedia, the free encyclopedia
காவல் தூதரை நோக்கி செபம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் மரபு மன்றாட்டுகளில் ஒன்றாகும். இது காவல் தூதரின் பரிந்துரையினை வேண்டும் விதமாக அமைந்துள்ளது. சிறுவர்களுக்கு துவக்கத்தில் கற்றுக்கொடுக்கப்படும் செபங்களில் இதுவும் ஒன்று. இது கடவுளின் அன்பில் கத்தோலிக்க திருச்சபைக்கு இருக்கும் நம்பிக்கையினையும் அவர் அளித்துள்ள அருட்கொடையான காவல் தூதரின் உள்ள நம்பிக்கையினையும் எடுத்தியம்பும் விதமாக அமைந்துள்ளது.