கிமு 5 ஆம் நூற்றாண்டில் கிரேக்கம்
கி.மு. 5 ஆம் நூற்றாண்டை உள்ளடக்கிய கிரேக்க அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் காலம் / From Wikipedia, the free encyclopedia
பாரம்பரிய கிரேக்கத்தில் கிமு 5 ஆம் நூற்றாண்டின் காலம் பொதுவாக கிமு 500 இல் தொடங்கி கிமு 404 இல் முடிவடைந்ததாகக் கருதப்படுகிறது. இருப்பினும் இது விவாதத்துக்கு உள்ளாக்கப்படுகிறது. மற்ற கிரேக்க நகர அரசுகளை விட பண்டைய ஏதென்சு அதிக கதைகள், நாடகங்கள் மற்றும் பிற எழுத்ததாக்கப் படைப்புகளை விட்டுச் சென்றதால், இந்த நூற்றாண்டானது பொதுவாக ஏதெனியன் பார்வையில் இருந்து ஆய்வு செய்யப்படுகிறது. நமது முக்கிய ஆதாரமான ஏதென்சிலிருந்து ஒருவர் பார்த்தால், இந்த நூற்றாண்டு கிமு 510 இல் ஏதெனியன் சர்வாதிகாரியின் வீழ்ச்சி மற்றும் கிளீசுத்தனீசுவின் சீர்திருத்தங்களுடன் தொடங்குகிறது என்று கருதலாம். எவ்வாறாயினும், முழு கிரேக்க உலகத்தையும் ஒருவர் பார்த்தால், கிமு 500 இல் ஐயோனியன் கிளர்ச்சியை அதன் தொடக்கமாக வைக்கலாம். இது கிமு 492 இன் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் முதல் படையெடுப்புக்குத் தூண்டுகோலானது. பாரசீகர்கள் ("மேடிஸ்" என்று அழைக்கப்படுபவர்கள்) இறுதியாக கிமு 490 இல் தோற்கடிக்கப்பட்டனர். கிமு 480-479 இல் கிரேக்கத்தின் மீதான பாரசீகத்தின் இரண்டாவது படையெடுப்பும் தோல்வியடைந்தது. டெலியன் கூட்டணி பின்னர் ஏதெனியன் மேலாதிக்கமாக உருவாகி ஏதெனியப் பேரரசாக உருவெடுத்தது. ஏதென்சின் அத்துமீறல்கள் நட்பு நகர அரசுகளில் பல கிளர்ச்சிகளை ஏற்படுத்தியது. அவை அனைத்தும் ஏதென்சின் படை பலத்தால் அடக்கப்பட்டன. ஆனால் ஏதெனியன் ஆதிக்கம் இறுதியாக எசுபார்த்தாவை ஏதென்சுக்கு எதிராக எழவைத்தது. அது கிமு 431 இல் பெலோபொன்னேசியப் போருக்குக் காரணமாயிற்று. இரு தரப்பினரும் சோர்வடைந்த பிறகு, கொஞ்சகாலம் அமைதி ஏற்பட்டது. பின்னர் எசுபார்த்தாவின் நன்மைக்காக போர் மீண்டும் தொடங்கியது. கிமு 404 இல் இறுதியாக ஏதென்சு தோற்கடிக்கப்பட்டது. மேலும் சில உள் ஏதெனியன் கிளர்ச்சிகள் கிரேக்கத்தில் 5 ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தது.