குடியரசு (நூல்)
From Wikipedia, the free encyclopedia
குடியரசு (The Republic, Politeia) என்ற நூல் சாக்கிரட்டீசு உரையாடல் நடையில் ஏறத்தாழ கி.மு 380களில் பிளேட்டோவால் எழுதப்பட்டதாகும். இது நீதியை வரையறுப்பதுடன் நீதிமிகு மாந்தர், நகரம்-அரசுகளின் தன்மையையும் ஒழுங்கையும் விவரிக்கிறது.[1] இது பிளேட்டோவின் மிகவும் அறியப்பட்ட ஆக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது. மெய்யியல் மற்றும் அரசியல் தத்துவம் துறைகளில் அறிவுசார்ந்தும் வரலாற்றிலும் மிகவும் தாக்கமேற்படுத்திய நூலாகவும் கருதப்படுகிறது.[2][3] இந்த நூலில், சாக்கிரட்டீசும் பிற ஏதென்சு நகரத்தினரும் வெளிநாட்டவரும் நீதியின் பொருள் குறித்து உரையாடுகின்றனர். நேர்மையான மனிதன் நேர்மையற்ற மனிதனை விட மகிழ்ச்சியாக உள்ளானா என்பதை ஆராய்கின்றனர். அக்கால பல்வேறு ஆட்சிகளைக் குறித்தும் ஒப்பிட்டு உரையாடுகின்றனர். பங்கேற்போர் உயிரின் வெவ்வேறு வடிவங்கள் குறித்தும் அழியாமை குறித்தும் உரையாடுகின்றனர். சமூகத்தில் மெய்யியலாளர்கள் மற்றும் கவிஞர்களின் பங்கு பற்றியும் உரையாடுகின்றனர்.[4]
Title page of an edition of Plato's Republic published by Cambridge University in 1713 | |
நூலாசிரியர் | பிளேட்டோ |
---|---|
உண்மையான தலைப்பு | Πολιτεία |
நாடு | பண்டைக் கிரேக்கம் |
மொழி | கிரேக்க மொழி |
பொருண்மை | அரசியல் தத்துவம் |
வெளியிடப்பட்ட நாள் | கி.மு 380 காலகட்டத்தில் |