குறைசி மக்கள்
From Wikipedia, the free encyclopedia
குறைசி மக்கள் (Quraysh) (அரபு மொழி: قريش) அரேபிய தீபகற்பத்தில் குறிப்பாக செங்கடலை ஒட்டிய ஹெஜாஸ் பகுதிகளில் வாழ்ந்த அராபிய வணிக குலத்தினர் ஆவார். குறைசி இனக்குழுவின் பனு ஹசிம் (Banu Hashim) குலத்தில் முகமது நபி பிறந்தார்.[1][2]
இசுலாம் தோன்றுவதற்கு முன்னிருந்தே மெக்கா நகரம் மற்றும் அதனுள் அமைந்த காபா வழிபாட்டுத் தலம் குறைசி இன மக்களின் கட்டுப்பாட்டில் தொடர்ந்து இருந்தது.
குறைசி இனக்குழுவினர், கிபி 630-இல் இசுலாமில் சேரும் வரை, முகமது நபியையும், அவரது தோழர்களையும் கடுமையாக எதிர்த்தனர். முகமது நபிக்குப் பின்னர், குறைசி இன மக்களே ஒட்டுமொத்த இசுலாமியர்களின் கலீபாக்களாக இருந்தனர். அவைகள்: ராசிதீன் கலீபகம், (அபூபக்கர்), (உதுமான்) (661 – 750), உமையா கலீபகம் (முதலாம் முஆவியா) (661 – 750) மற்றும் அப்பாசியக் கலீபகம் (750–1258 & 1261–1517).