குற்ற உளவியல்
குற்றவாளிகளின் எண்ணங்கள், நோக்கங்கள், செயல்கள், எதிர்வினைகள் போன்றவற்றை குறித்து ஆய்வுகளைச் / From Wikipedia, the free encyclopedia
குற்ற உளவியல் (Criminal psychology; Criminological psychology, [2] ) என்பது, குற்றவாளிகளின் பார்வைகள், எண்ணங்கள், நோக்கங்கள், செயல்கள், எதிர்வினைகள் குறித்தும், அத்துடன் குற்றவியில் நடத்தையில் உட்படும் அனைத்தையும் ஆய்வுகளைச் செய்யும், உளவியில் பிரிவு ஆகும். [3][4] ஒவ்வொருவரும் சமூக ஒற்றுமை, அமைதி, முன்னேற்றம் கருதி அதற்கென உருவாக்கப்பட்ட தனித்தனிச் சட்டங்களைப் பின்பற்ற, சட்டங்கள் இருந்தபோதிலும், மக்கள் தத்தம் உணர்ச்சிகளையும், உரிமைகளையும், கோட்பாடுகளையும், பொதுநலத்துக்காக, விட்டுக்கொடுத்து வாழ்தல் இன்றியமையாததாகிறது. இந்த சமூக நலனுக்கானச் சட்டங்களை மீறி நடப்பது, ‘குற்றம்’ என்று கூறப்படுகிறது. ஆகவே, சமூக அமைப்புக்கு ஒத்து நடக்காதவர்களைச் சட்டமும், சமூகமும் குற்றவாளிகள் என அழைக்கின்றனர். இத்தகையோர் குற்றம் புரிவதற்கு, பல காரணிகள் இருப்பதாக உளவியில் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.[5][6]