கௌமாரம்
முருகனை முழுமுதற் கடவுளாகக் கொண்ட இந்து சமயப் பிரிவு / From Wikipedia, the free encyclopedia
கௌமாரம் (Kaumaram) முருகனை முழு முதற் கடவுளாகக் கொண்ட இந்து சமயப் பிரிவாகும். குமாரனாகிய முருகனே கடவுள். பேரின்ப வடிவினனாக அவனை வழிபட வேண்டும் என்ற சமயக் கோட்பாட்டை உடையது. முருக வழிபாடு கௌமாரம் என பெயர்பெற்றது. கௌ என்னும் சொல்லுக்கு மயில் என்ற பொருளையும் மாரம் என்ற சொல்லுக்கு சூரசம்ஹாரம் நடந்த திருச்செந்தூரில், மரமாக நின்ற சூரனை மயிலாக கொண்டதால் கௌ+மாரம் என்று வழங்கி மயில்வாகனனை கௌமாரம் எனும் வழிபாட்டு முறையை ஷண்மதங்களில் ஒன்றாக ஆதிசங்கரர் அருளினார்.
ஷண்மதங்களாவன:
- கணபதி வழிபாடு காணாபத்தியம்,
- சிவ வழிபாடு சைவம்-சிவனியம்,
- விஷ்ணு வழிபாடு வைணவம்-மாலியம்,
- சூரிய வழிபாடு சௌரம்,
- அம்மன் வழிபாடு சாக்தம்,
- முருக வழிபாடு கௌமாரம். என்பவை ஆகும்.[1]
10-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, சாக்தம், காணாபத்தியம் மற்றும் கௌமாரம் பெரும்பாலும் சைவ சமயத்துடன் இணைக்கப்பட்டது.
முருகப்பெருமான், காதல் மற்றும் போரின் தெய்வம் மற்றும் குமரன், கந்தன், கடம்பன், கார்த்திகேயன், சண்முகன், ஆறுமுகன் மற்றும் சுப்பிரமணியன் என்றும் அழைக்கப்படுகிறார். குமாரின் பெரும்பாலான பக்தர்கள் அவரின் குடும்ப உறுப்பினரான பார்வதி, சிவன் மற்றும் விநாயகரை வணங்குகிறார்கள். குமரனைப் பற்றிய முக்கியமான இறையியல் நூல்கள் சைவ ஆகம நியதியின் ஒரு பகுதியாகும். இந்த உப-பாரம்பரியம், தென்னிந்தியா, இலங்கையில் உள்ள தமிழர்கள், கன்னடர்கள், வேடர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடையே காணப்படுகிறது.[2] குமரன்/முருகன் மற்றும் அவரின் துணைவி வள்ளி என்ற உள்ளூர் பழங்குடியின பெண்ணின் காதல் கதை தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது.[3][6]
திருப்புகழ் கௌமாரம் பற்றிய முக்கியமான தமிழ் இலக்கியப் படைப்புகளில் ஒன்றாகும்.[7]