சீக்கியக் குருக்கள்
From Wikipedia, the free encyclopedia
1469-இல் குரு நானக் தொடங்கி அடுத்த நூற்றாண்டுகளில் தொடர்ந்த குரு பரம்பரை பரப்பியுரைத்த புனித அறிவுரைகள் படிப்படியாக தனிச் சமயமாக உருவானது. இந்தப் பரம்பரையில் வந்த குருக்கள் சீக்கிய குருக்கள் எனப்படுகின்றனர்.[1] முதல் குருவான குரு நானக்கை அடுத்தடுத்து பத்தாவது குரு குரு கோவிந்த் சிங் வரை மனிதர்களாக இருந்தனர்; குரு நானக்கின் வழிகாட்டுதலைக் கொண்ட புனித நூலாகிய ஆதி கிரந்தம் அல்லது கிரந்த சாகிப் குரு கோவிந்த் சிங்கால் குரு கிரந்த் சாகிப் என உயர்த்தப்பட்டு இறுதியான மற்றும் நிரந்தரமான பதினொன்றாவது குருவாக வழிமொழியப்பட்டது. அது முதல் சீக்கியர்களின் சமயகுருவாக குரு கிரந்த சாகிப் நிலைத்துள்ளது.