சுதேசனை
From Wikipedia, the free encyclopedia
சுதேசனா அல்லது சுதேசனை இந்து காவியமான மகாபாரதத்தில், மன்னர் விராடனின் மனைவியாக இருந்தார், பாண்டவர்கள் நாடுகடத்தப்பட்ட காலத்தில் அஞ்சாத வாசத்தில் ஒரு ஆண்டு காலம் இங்குதான் மறைத்து வாழ்ந்து வந்தனர். .உத்தரன், உத்தரை, சுவேதன், மற்றும் சங்ககன் ஆகியோரின் தாயாவாள். சுதேசனைக்கு கீசகன் என்ற ஒரு ஒரு சகோதரன் இருந்தான். மேலும் சாதனிகன் என்ற ஒரு மைத்துனரும் உண்டு.
விரைவான உண்மைகள் சுதேசனை, தகவல் ...
சுதேசனை | |
---|---|
அரசியான சுதேசனா(இடது) திரௌபதியை வாழ்த்துகிறார். மற்றவர்கள் அவரின் அந்தரங்கப் பணியாளர்கள் | |
தகவல் | |
துணைவர்(கள்) | விராடன் |
பிள்ளைகள் | உத்தரன், உத்தரை, சுவேதன், சங்ககன் |
மூடு
சுதேசனாவின் சொந்த இராச்சியம் பற்றி மகாபாரதத்தில் குறிப்பிடப்படவில்லை. அவரது மூத்த சகோதரர் கீசகன், மத்ஸசய நாட்டு இராணுவத்தின் தளபதியாக இருந்தார். எனவே மறைமுகமாக, சுதேசனா மத்சய வம்சாவளியைச் சேர்ந்தவர். நவீன சொற்களில் இந்த சுதேசனா என்ற சொல் நன்கு பிறந்தவர் என்ற ஒரு பொருளைக் கொண்டுள்ளது.