சூர் (பஷ்தூன் பழங்குடியினர்)
பஷ்தூன் பழங்குடியினம் / From Wikipedia, the free encyclopedia
'சூர் (Sur) என்பவர்கள் கக்கர் இனத்தைச் சேர்ந்த ஒரு வரலாற்று பஷ்தூன் பழங்குடியினர் ஆவர். இப்போதுஇவர்கள் முக்கியமாக ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர். இவர்கள் அரேபியத் தளபதி காலித் இப்னு அல்-வாலித் என்பவரை தங்களின் வம்சாவளியாகக் கூறுகின்றனர். இந்தியாவில் சூர் பேரரசின் நிறுவனர், சேர் சா சூரி சூர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கி.பி. 1540 முதல் சூரி பேரரசை இவர்கள் ஆட்சி செய்தனர். பாரசீக இராணுவத்தின் துணை கொண்டு முகலாயப் பேரரசை மீட்டெடுத்த நசிருதீன் உமாயூனால் கி.பி. 1555 இல் தொடுக்கப்பட்ட சிர்ஹிந்த் போருக்குப் பிறகு இவர்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டனர்.[1]