![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Chera_emblem.jpg/640px-Chera_emblem.jpg&w=640&q=50)
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
சங்ககால சேர மன்னன் / From Wikipedia, the free encyclopedia
சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை சங்க காலச் சேர வேந்தர்களுள் ஒருவன். இவன், கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டவன். யானை போலப் பெருமித நோக்கு உடையவன் ஆதலால் இவனை 'யானைக்கட் சேய்' என்றனர். [1] குறுங்கோழியூர்க் கிழார், பேரிசாத்தனார், பொருந்தில் இளங்கீரனார் ஆகிய புலவர்கள் இவனைப் பாடியுள்ளனர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/74/Chera_emblem.jpg/320px-Chera_emblem.jpg)
மாந்தை நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரசனை மாந்தரன் என்றனர்.
'பதிற்றுப்பது ஏழாம்பத்துப் பாட்டுடைத் தலைவன் செல்வக் கடுங்கோவைப் பாடிய புலவர் கபிலர் இல்லையே' என இவன் வருத்தப்பட்டுக்கொள்வதால், 7 ஆம் பத்துத் தலைவனின் காலத்துக்குப் பிற்பட்டவன் என்பது தெளிவாகிறது. இவனைக் "கபிலரைப் போல நான் பாடுவேன்" எனப் பொருந்தில் இளங்கீரனார் குறிப்பிடுவதால், இவனைப் பதிற்றுப்பத்து, 10 ஆம் பத்தின் தலைவன் எனக் கொள்வது பொருத்தமானது.