சேரர் குடிப்பெயர்கள்
From Wikipedia, the free encyclopedia
கடுங்கோ, குடக்கோ (குடவர் கோமான்), குட்டுவன், கோதை, சேரல் (சேரன், சேரமான்), பொறை (பொறையன்) பூழியர்கோ, பூழியர் மெய்ம்மறை, (பூழியன்) வானவன் என்பன சேர அரசர்களின் குடிப்பெயர்கள். இவற்றில் சில அவர்களின் ஆட்சி தொடங்கப்பட்ட நாட்டின் பெயரால் தோன்றியவை. பேரரசன் காலத்தில் இளவரசு பட்டம் கட்டி நாட்டின் ஒருபகுதியை ஆளும்படி செய்து, ஆளும்பயிற்சி தருவது அக்கால வழக்கம். இப்படி ஆண்ட குடநாட்டு அரசன் குடக்கோ. குட்டநாட்டு அரசன் குட்டுவன். பொறைநாட்டு அரசன் பொறையன்.
குட்டநாட்டில் இளவரசனாயிருந்து பயிற்சி பெற்று அரசனானவன் ‘குட்டுவன்’. அவ்வாறு குடநாட்டிலிருந்து அரசனானவன் ‘குடவர் கோமான்’. பொறைநாட்டில் (பொள்ளாச்சி நாட்டில்) இருந்து அரசனானவன் பொறையன். இவ்வாறு மாந்தையிலிருந்து அரசனானவன் மாந்தரன்.