சோழர்கால வாணிகம்
From Wikipedia, the free encyclopedia
சோழர்கள் காலத்தில் வாணிகம் செழித்து வளர்ந்தது. உள்நாட்டு வாணிகம் வெளிநாட்டு வாணிகம் என்று இருவகையாக வாணிகம் நடைபெற்றது. வாணிகத்திற்கு உதவப் பெருவழிகள் இருந்தன.வெளிநாட்டு வாணிகதை மேற்கொள்ள சோழப் பேரரசில் பல துறைமுகங்கள் இருந்தன.வாணிகத்தினால் ஏற்றுமதியும் இறக்குமதியுமாகத் துறைமுகங்கள் நிறைந்திருந்தன. தமிழ்ப் பொருட்களுக்கு அயல் நாடுகள் வாணிகச் சந்தைகளாயின. இறக்குமதி, ஏற்றுமதி பொருட்களுக்குச் சுங்கம் விதிக்கப்பட்டது. அது அரசின் கருவூலத்திற்கு மிகுதியான வருவாயைத் தந்தது. வெளிநாட்டுத் தொடர்புகளால் தமிழர் நாகரிகம், புகழ் ஆகியவை பிற நாடுகளில் பரவின. பணப்புழக்கத்திற்கு முடை ஏற்பட்ட போது செல்வர்களிடமிருந்து வட்டிக்குப் பணம் பெற்றனர்.