ஜாவி கோயில், கிழக்கு ஜாவா
From Wikipedia, the free encyclopedia
ஜாவி கோயில் (Jawi temple) ( இந்தோனேசிய மொழி: Candi Jawi , அசல் பெயர்: Jajawa), இந்தோனேசியாவில் உள்ள, சிங்காசாரி ராச்சியத்தைச் சேர்ந்த இந்து-பௌத்த கோயிலாகும். இக்கோயில் 13 நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்ததாகும். இக்கோயில் இந்தோனேசியா, கிழக்குச் சாவகத்தில் பசுருவான், கேகமடான் பிரிகேன், சன்டி வேட்ஸ் கிராம வெலிராங் மலையின் கிழக்குச் சரிவில் அமைந்துள்ளது. பசுருவான் நகரத்திற்கு 31 கிலோ மீட்டர் மேற்கே அல்லது சுரபாயாவிற்கு 41 கி.மீ. தெற்கே அமைந்துள்ளது.[1] இக்கோயில் கெகமதன் பாண்டன் - கெகமதன் ப்ரிஜென் மற்றும் பிரிங்கேபுகான் இடையே உள்ள முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோயில் ஒரு இந்து-பௌத்த வழிபாட்டுத் தலமாக கருதப்படுகிறது. இருப்பினும் சிங்காசாரியின் கடைசி மன்னரான கெர்த்தனேகர என்னும் மன்னரை கௌரவிப்பதற்காக இந்த கோயில் சவக்கிடங்கு கோயிலாக அர்ப்பணிக்கப்பட்டது. மறைந்த மன்னரின் அஸ்தி சிங்காசாரி மற்றும் ஜாகோ கோயில் ஆகிய இடங்களில் உள்ள மேலும் இரண்டு கோயில்களிலும் வைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
நாகரக்ரேதகமா எனப்படுகின்ற நூலில் 56 ஆவது காண்டத்தில் இந்த கோயில் ஜஜவா என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்காசாரி மன்னர் கெர்த்தனேகர மன்னர் சைவ-பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு வழிபாட்டுத் தலம் ஒன்று அமைக்க உத்தரவிட்டதன் அடிப்படையில் இக்கோயில் கட்டப்பட்டது. அவர் இவ்வாறான, இரு மதங்களுக்குமான ஒத்திசைவை ஆதரித்து வந்தார்.[1]