ஜெகதீஷ் சரண் வர்மா
From Wikipedia, the free encyclopedia
நீதியரசர் ஜெகதீஷ் சரண் வர்மா அல்லது ஜெ. எஸ். வர்மா (Jagdish Sharan Verma) (18 சனவரி 1933 – 22 ஏப்ரல் 2013) இந்திய உச்ச நீதிமன்றத்தில் 27வது தலைமை நீதிபதியாக 25 மார்ச் 1997 முதல் 18 சனவரி 1998 முடிய பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக 1999 முதல் 2003 முடிய பணியாற்றினார். கர்நாடகா முதல் பொம்மை வழக்கில், இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356ன் கீழ் மாநில அரசுகளை கலைப்பது குறித்து விரிவான தீர்ப்பு வழங்கினார்.[1]இவரது தீர்ப்பால் இந்திய அரசு, மாநில அரசுகளை தன்னிச்சையாக கலைக்க இயலாமல் போயிற்று.
ஜெகதீஷ் சரண் வர்மா | |
---|---|
நீதியரசர் ஜெகதீஷ் சரண் வர்மா, ஆண்டு 2011 | |
27வது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 25 மார்ச் 1997 – 18 சனவரி 1998 | |
முன்னையவர் | அஜீஸ் முசாப்பர் அகமதி |
பின்னவர் | மதன் மோகன் பூஞ்சி |
தலைவர், இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் | |
பதவியில் 4 நவம்பர் 1999 – 17 சனவரி 2003 | |
நீதியரசர், இந்திய உச்ச நீதிமன்றம் | |
பதவியில் சூன் 1989 - 24 மார்ச் 1997 | |
தலைமை நீதியரசர், இராஜஸ்தான் உயர் நீதிமன்றம் | |
பதவியில் செப்டம்பர் 1986 - சூன் 1989 | |
தலைமை நீதியரசர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் சூன் 1985 - செப்டம்பர் 1986 | |
நீதியரசர், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் | |
பதவியில் சூன் 1972 - சூன் 1985 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 18 சனவரி 1933 சத்னா, மத்திய மாகாணம் மற்றும் பேரர், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | 22 ஏப்ரல் 2013 (வயது 80) குருகிராம், அரியானா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | புஷ்பா |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
இவர் 2012 தில்லி கும்பல் பாலியல் வல்லுறவு வழக்கிற்குப் பின்னர் குற்றவியல் சட்டங்களில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து இந்திய அரசுக்கு 2013ஆம் ஆண்டில் மூன்று நபர்கள் கொண்ட வர்மா ஆணையம் பரிந்துரை செய்தது.[2][3][4] [5] [6]