தாயக் கட்டை
From Wikipedia, the free encyclopedia
தாயக் கட்டை அல்லது பகடைக்காய்,கவறுக்காய்,[1](dice), déபிரஞ்சு; datumஇலத்தீன்; பகிர்தல் (அ) விளையாடுதல்.[2] இது ஒரு வகையான விளையாட்டுப் பொருளாகும்.[3] உருட்டி இடப்படுதல் மூலம் ஆடப்படுகிறது. கனசதுர வடிவிலான பகடைக்காயைச் சுற்றிலும் எண்கள் (புள்ளிகள்) பதிக்கப்பட்டிருக்கும். இது ஆறு முகங்களைக் கொண்டிருக்கும். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு புள்ளிகள் அமையப் பெற்றிருக்கும். பகடை தரையில் இடப்பட்டிருக்கும் போது, மேற்புறத்தில் உள்ள எண்கள் காய்களின் நகர்த்துதலுக்கு இலக்காகும். நிகழ்தகவுப்பரவல் மூலம் சீரற்ற தேர்வு முறையில் எண்கள் விழுகின்றன. இது மட்டுமல்லாது பகடைகள் கனசதுரமல்லாது பல வடிவங்களிலும் உள்ளன. பிரமிடு, அறுங்கணம், பன்முகம் போன்ற வடிவங்களுடன் ஆறு அல்லாது அதற்கும் அதிகப்படியான எண்ணிக்கையைச் சுட்ட பயன்படுகின்றன. சூதாட்டத்தில் நினைத்த எண் கொனற சில மாறுதல்களுடனும் பகடையில் ஏமாற்றுதலுக்காக எண்கள் இடப்படுகின்றன. பிளேமிய பாரம்பரிய பகடை விளையாட்டுகளில் பகடைத்தட்டு அருங்கோண வடிவிலும் துணியால் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். பகடைகளை உருட்டி இடுவதற்கு பகடைப்பெட்டிகளும், துணிப்பைகளும் பயன்படுத்தப்படுகின்றன.