திராவிடர் கழகம்
திராவிடக் கட்சி / From Wikipedia, the free encyclopedia
திராவிடர் கழகம் என்பது ஈ. வெ. இராமசாமி என்பவரால் சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி எதிர்ப்பு, பெண் உரிமைகள், இறை மறுப்பு ஆகிய கொள்கைகளை முன்னிறுத்தி தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும். இதுவே முதலாவது திராவிடக் கட்சி. இதன் நிறுவனர் ஈ. வெ. இராமசாமி ஆவார். இக்கட்சி தற்காலத் தமிழ்நாட்டின் வரலாற்றைச் செதுக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எடுத்துகாட்டாக மூடநம்பிக்கைகளைப் பரிசோதனை முறையில் முறியடிப்பது இவர்கள் மேற்கொள்ளும் ஒரு விழிப்புணர்வு நடவடிக்கை ஆகும். கழகத்தின் தற்போதைய தலைவர் கி. வீரமணி ஆவார். இதன் துணைத்தலைவர் கலி. பூங்குன்றன்.இக்கழகம் விடுதலை எனும் நாளிதழை வெளியிடுகிறது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் திராவிடர் கழகம், தலைவர் ...
திராவிடர் கழகம் | |
---|---|
தலைவர் | கி. வீரமணி |
நிறுவனர் | ஈ. வெ. இராமசாமி |
துணைத்தலைவர் | கலி. பூங்குன்றன் |
தொடக்கம் | ஆகத்து 27, 1944 (1944-08-27) |
முன்னர் | நீதிக் கட்சி |
பின்னர் | திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
தலைமையகம் | பெரியார் திடல், வேப்பேரி சென்னை |
செய்தி ஏடு | விடுதலை உண்மை பெரியார் பிஞ்சு மார்டன் ரேசலிசன் திராவிட நாற்று திராவிட பொழில் |
மாணவர் அமைப்பு | திராவிட மாணவர் கழகம் |
இளைஞர் அமைப்பு | திராவிடர் கழக இளைஞரணி |
கொள்கை | சுயமரியாதை பகுத்தறிவு சமூக நீதி பெண்ணுரிமை இறை மறுப்பு சமய மறுப்பு சாதி எதிர்ப்பு |
கட்சிக்கொடி | |
இணையதளம் | |
http://www.dravidarkazhagam.org |
மூடு