திருநாடு
From Wikipedia, the free encyclopedia
திருநாடு (Holy Land) என்றும், புண்ணிய பூமி என்றும் அழைக்கப்படுகின்ற நிலப்பகுதி மேற்கு ஆசியாவில் யூத மதம், கிறித்தவம், இசுலாம், பாஹாய் ஆகிய சமயங்களுக்கு முதன்மை வாய்ந்த மண்டலமாக அச்சமயத்தவர்களால் கருதப்படுகின்ற நிலப்பரப்பைக் குறிப்பதாகும் [1]. துல்லியமாக வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டிராத இந்நிலப்பரப்பு எபிரேயத்தில் Ereṣ HaQodhesh/Eretz HaKodesh என்றும், அரபியில் Bilad Ash'Sham கூறப்படுகிறது.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இன்றைய நாட்டு எல்லைப்படி, திருநாடு என்பது இசுரயேல், பாலஸ்தீன ஆட்சி மண்டலம், யோர்தான், மற்றும் லெபனானின் சில பகுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கும். இவ்வாறு யூத மதம், கிறித்தவம், இசுலாம், பாஹாய் ஆகிய சமயங்கள் இந்நிலப்பகுதியைப் புனிதமாகக் கருதுவதற்கு ஒரு முக்கிய காரணம் அம்மதங்கள் எருசலேம் நகருக்கு அளிக்கின்ற சமய அடிப்படையிலான முதன்மை ஆகும்.
யூதர்கள் தம் வரலாற்றில் எருசலேம் தலைநகராக இருந்து, அங்கு தம் சமயத்திற்கு மையமான திருக்கோவில் இருந்ததைக் குறிப்பிடுகிறார்கள். கிறித்தவம் எருசலேமைத் தன் பிறப்பிடமாகக் கருதுவதற்கு அந்நகரில் இயேசு கிறித்து சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்பது முக்கிய காரணம். இசுலாம் எருசலேம் நகரத்தை மெக்கா, மதீனா ஆகிய புனித நகரங்களுக்கு அடுத்த நிலையில் வைப்பது அந்நகரை முகம்மது நபியின் வாழ்க்கையோடு தொடர்புடையதாகக் கருதுவதுமாகும்.
திருநாடு தங்கள் சமயத்திற்குப் புனிதமானது என்று கிறித்தவர்கள் கருதியதும் சிலுவைப் போர்கள் நிகழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம். எனவே அவர்கள் பிசான்சிய அரசிடமிருந்து திருநாட்டைக் கைப்பற்றிய சுல்ஜுக் துருக்கிய முசுலிம் ஆட்சியிலிருந்து அப்பகுதியை மீட்க முயன்றனர்.
விவிலியக் காலத்திலிருந்தே திருநாடு யூதர்களும் கிறித்தவர்களும் அதன் பின் இசுலாமியரும் திருப்பயணமாகச் செல்லும் முதன்மை இடமாக மாறியது.