திருப்பதி வெங்கடாசலபதி கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
திருப்பதி வெங்கடாசலபதி கோயில் (Venkateswara Temple) அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், இத்தலத்தின் மூலவர் ஏழுமலையான் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தின் மூலவர் வெங்கடாசலபதி என்றும் வேங்கடன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் பத்மாவதி அம்மையார்.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 13.683250°N 79.347194°E / 13.683250; 79.347194 |
பெயர் | |
புராண பெயர்(கள்): | கருடாத்ரி, விருஷபாத்ரி, அஞ்சனாத்ரி, வேங்கடாத்ரி |
பெயர்: | திருப்பதி வெங்கடாசலபதி கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருமலை |
மாவட்டம்: | திருப்பதி |
மாநிலம்: | ஆந்திரா |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வெங்கடாசலபதி |
உற்சவர்: | மலையப்பசாமி, கல்யாண வெங்கடேஸ்வரர் |
தாயார்: | பத்மாவதி |
தல விருட்சம்: | புளிய மரம் |
தீர்த்தம்: | சுவாமி புஷ்கரிணி |
ஆகமம்: | வைகானசம் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென்னிந்திய கட்டடக்கலை |
வெங்கடாத்ரி மலை 3200 அடி உயரமும், 10.33 சதுர மைல்கள் கொண்டதாகும். இத்தலத்தில் லட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இந்த லட்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.[1] முடி செலுத்துவது பக்தர்களின் வேண்டுதல்களில் பிரதானமாக இருக்கிறது. இத்தலம் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயிலாக உள்ளது.[2]