திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டின் இந்து வைஷ்ணவக் கோயில்களில் ஒன்றாகும். வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றான, கோயில் கோபுரங்களும் மண்டபங்களும், நுட்பமான சிற்பக் கலைகளும் நிறைந்த இக்கோவில் சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் உள்ளது. இத்தலத்து எம்பெருமான் மகாபாரதப் போரின்போது பார்த்தனுக்கு (அர்ஜுனன்) தேரோட்டிய (சாரதி) வடிவில் காட்சி அளிக்கிறார். இத்தலத்து மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணர் என்ற போதிலும் உற்சவராகிய பார்த்தசாரதியின் பெயரிலே புகழப்பெற்றுள்ளது.
அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13.05395°N 80.27675°E / 13.05395; 80.27675 |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | பார்த்தசாரதி பெருமாள் |
பெயர்: | பார்த்தசாரதி திருக்கோயில் |
சமக்கிருத ஒலிப்பெயர்ப்பு: | Brindaranya Kshetram |
தமிழ்: | திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | திருவல்லிக்கேணி, சென்னை, தமிழ்நாடு |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வெங்கடகிருஷ்ணன் (கிருஷ்ணர்) |
சிறப்பு திருவிழாக்கள்: | பிரதி வெள்ளிக் கிழமை வேதவள்ளி தாயார் புறப்பாடு |
உற்சவர்: | பார்த்தசாரதி பெருமாள் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டடக்கலை |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 8-ஆம் நூற்றாண்டு [1][2] |
அமைத்தவர்: | பல்லவர்[1] |
இக்கோயில் முதலில் பொ.ஊ. 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்கள் உள்ளன. அவையாவன நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர். இக்கோவில் சென்னை பழமையான கட்டமைப்புகளில் ஒன்றாகும். பொ.ஊ. 15-ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் மன்னர்களால் கட்டப்பட்ட வேதவள்ளி தாயார் சன்னதி, ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் வைகானச ஆகமத்தினையும், தென்கலையையும் பின்பற்றுகிறது. உடன் நரசிம்மர் மற்றும் கிருஷ்ணருக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன.
இக்கோவிலின் கோபுரங்களிலும், மண்டபத் தூண்களிலும் தென் இந்திய கட்டிடக் கலையை வலியுருத்தும் நிறைய சிற்ப வேலைபாடுகள் காணப்படுகின்றன.