திருவள்ளுவர் நாள்
From Wikipedia, the free encyclopedia
திருவள்ளுவர் நாள் என்பது புகழ்பெற்ற தமிழ் புலவர் திருவள்ளுவரை பெருமைப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளின் ஒரு நிகழ்வாக தை மாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப் பொங்கல் திருநாளன்று, திருவள்ளுவர் நாளாக கொண்டாடப்படுகிறது. கிரிகோரியன் நாட்காட்டியின்படி சனவரி மாதம் 15ஆவது நாள் (நெட்டாண்டு எனில் சனவரி 16) திருவள்ளுவர் நாளாகும்.[1]
இந்நாளானது தமிழக அரசின் விடுமுறை நாட்களில் ஒன்றாகும்.